Showing posts with label புகைப்படப் போட்டித் தகவல்கள். Show all posts
Showing posts with label புகைப்படப் போட்டித் தகவல்கள். Show all posts

Saturday, March 15, 2014

மகளிர் தினம் அனுசரிக்கப்படும் இந்த மார்ச் மாதத்தில் ITHI மகளிர் அமைப்பு விழிப்புணர்வுக்காக அறிவித்திருக்கும் ஒளிப்படப் போட்டிதான் FEMME VUE.

ஐடி துறையில் பணியில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணவும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும் பெங்களூரில் இயங்கி வரும் அமைப்பு ITHI. அவ்வப்போது உழைக்கும் மகளிரின் பிரச்சனைகள், உரிமைகள் குறித்த கருத்தரங்கங்கள், விவாதங்கள், கூட்டங்களை மகளிருக்காகவும், பொதுமக்கள் உணர்ந்து கொள்வதற்காகவும் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் போட்டியின் நோக்கம் ஒத்த கருத்தும் புரிதலும் கொண்டவர்களை ஒன்று சேர்த்து மகளிர் குறித்த உலகின் பார்வையை, மகளிர் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வருவதேயாகும். வேறு எந்த விதத்திலும் சொல்ல முடியாத கதையை மனதில் தைப்பது போல அழுத்தமாகச் சொல்லக் கூடிய சக்தி வாய்ந்தவை ஒளிப்படங்கள் என நம்புகிற அமைப்பு, அனைவரையும் இதில் பங்கு கொண்டு தம்மைக் கெளரவிக்கக் கேட்டுக் கொள்கிறது.

படங்கள் கண்டிப்பாகப் பின் வரும் கருக்களை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும்:

  • வெவ்வேறு சமுதாயங்கள் பெண்களை எப்படிப் பார்க்கின்றன.. சித்தரிக்கின்றன..
  • சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு.. அரசியல், கலை, கல்வி, ஆய்வுத் துறை, தொழில் துறை,  ஊடகங்கள் ஆகியவற்றில் பெண்களின் இடம்..
  • இன்றைய உழைக்கும் மகளிர்.. சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது..

பிரிவுகள்:

  • A பிரிவு, தனிப்படங்களுக்கானது.
  • B பிரிவு, ஒளிப்படக் கதைக்கானது (அதாவது 2 அல்லது 5 படங்கள் ஒரு குறிப்பிட்டக் கருவை வெளிப்படுத்துவதாக.. அல்லது ஒரு கதையைச் சொல்வதாக.. இருக்க வேண்டும்).
கவனிக்க வேண்டிய முக்கிய  விதிமுறைகள்:
  • படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 27 மார்ச் 2014 மாலை ஐந்து மணி.

  • உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் ஆண், பெண் இரு பாலினரும், எந்த வயதினரும், எந்த நாட்டினரும் என யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
  • ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் ஒரே படத்தை இரண்டு பிரிவுகளுக்கும் கொடுக்கக் கூடாது.
  • அடிப்படை திருத்தங்கள் செய்து படங்களை மேம்படுத்த அனுமதி உண்டு.
  • வண்ணம், கருப்பு வெள்ளை இரண்டு வகைப்படங்களும் தரலாம்.
  • JPG file ஆக சமர்ப்பிக்க வேண்டும்.
  • 1500x2100 பிக்ஸல்; 150-க்கு அதிகமான dpi மற்றும் 20 MB அளவு வரை இருக்கலாம். [வெற்றி பெற்றவர்கள் print செய்யும் வசதிக்காக, அதிக resolution படங்களை போட்டிக்குப் பிறகு சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.]
போட்டிக்குத் தரப்படும் படங்கள் creative commons License_கு கீழ் வரும். அதாவது அவற்றைப் பிரசுரிக்க.., கண்காட்சியில் பயன்படுத்த.., print செய்ய.., விநியோகிக்க.., இணையத்தில் பயன்படுத்த அனுமதியை விரும்புகிறது அமைப்பு. இதற்கென சன்மானங்கள் எதிர்பாராமல், பயன்படுத்தும் ஒவ்வொரு சமயமும் தெரிவிக்க வேண்டுமென நினைக்காமல் இந்த விதிமுறைகளுக்குச் சம்மதம் என்றால் மட்டுமே கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறது.

படங்களைச் சமர்ப்பிக்கவும் மேலும் விரிவான விவரங்களுக்கும் இங்கே http://itecentre.co.in/ithi/#events செல்லவும்.

30 மார்ச் அன்று போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். பெங்களூரில் எந்த இடத்தில்.. என்பது அவர்களது தளத்தில் விரைவில் அறிவிப்பாகும். அத்துடன் அமைப்பின் FB பக்கத்தில் https://www.facebook.com/Ithiforwomen வென்றவர்களது ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்

ஒளிப்பட நுட்பங்கள் பிரமாதமாக அமைய வேண்டும் என்பதை விடவும் எத்தனை வலுவாக படம் கருவை வெளிப்படுத்துகிறது என்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படும்.
***

AID பெங்களூர், விழிப்புணர்வுக்காக நடத்திய ஒளிப்படப் போட்டி குறித்த அறிவிப்பு விரிவாக இங்கே. கலந்து கொண்ட படங்களில் கண்காட்சிக்குத் தேர்வான படங்கள் 15 குறித்த விவரங்கள் இங்கே. இவற்றோடு பெங்களூர் குறித்த மேலும் பல ஒளிப்படங்களுடன், மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில், பெங்களூரின் தொம்லூர் பகுதியிலிருக்கும் தளம் அரங்கில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் வாய்ப்புக் கிடைக்கிறவர்கள் கலந்து கொள்ளுங்கள்!

***

Monday, February 17, 2014

AID (Association for India's Development) ஒரு இலாப நோக்கற்ற, தன்னார்வ நிறுவனம். பாராபட்சமற்ற நடுநிலையான, நியாயமான சமுதாயத்தை உருவாக்கவும், சமுதாயத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காவும் பாடுபட்டு வருகிறது. கல்வி,வாழ்வாதாரம், ஆரோக்கியம், பெண்கள் உரிமை, இயற்கை வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் AID, பெங்களூரில் பரவலாக மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டியை அறிவித்துள்ளது. அத்தோடு நிதி திரட்டி இது போன்ற சேவைகளுக்கு ஊக்கம் தரும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.


*
SOUL - SPACE - SOCIETY
BANGALORE AS YOU SEE IT
[ஆன்மா - வெளி - சமூகம்
பெங்களூர், உங்கள் பார்வையில்..]
இதுதான் தலைப்பு.

*இதற்கென உருவாக்கப்பட்டுள்ள Face Book பக்கத்தில் படங்களை வலையேற்ற வேண்டும்: https://www.facebook.com/AIDIndiaBangalore?sk=app_292725327421649 [படம் ஏற்றுவதில் error message வருமாயின் வேறொரு browser உபயோகித்துப் பார்க்கவும்.]

அங்கேயே விதிமுறைகளும் தரப்பட்டிருந்தாலும் தமிழில் இங்கும்:

*ஒருவருக்கு 5 படங்கள் வரை அனுமதி.

*இரண்டே பரிசுகள்தாம். முதல் பரிசு ரூ 10000/- இரண்டாம் பரிசு ரூ 5000/-

*முதல் பத்தியில் குறிப்பிட்டிருந்த “கல்வி, வாழ்வாதாரம், ஆரோக்கியம், பெண்கள் உரிமை, இயற்கை வளம்” ஆகிய தலைப்புகளின் கீழ் படம் பொருந்தி வர வேண்டும்.

*வாக்குகள் அளிக்கும் முறை ஊக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருப்பினும் அது பரிசீலனையின் ஒரு பகுதியாகவே இருக்கும். வாக்களிப்பு முறையால் படங்கள் இன்னும் பலரைச் சென்றடைந்து விழிப்புணர்வுக்கும் உதவுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மற்றபடி நடுவர் குழுவே கண்காட்சிக்கான படங்களைத் தேர்வு செய்வர். அதிலிருந்து முதல் பரிசுக்கான படங்களை போட்டி அமைப்பாளர் நியமிக்கும் சிறப்பு நடுவர் தேர்வு செய்வார்.

*படம் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். டெக்னிக்கலாக சிறப்பாக இருக்கிறதா என்பதை விடவும் கருவினை எந்த அளவுக்குப் படம் வெளிக்கொண்டு வருகிறது என்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.

* எப்போதுமே போட்டிக்கு சமர்ப்பிக்கும் படங்களில் வாட்டர் மார்க் இருக்கக் கூடாது, என்பது பொதுவான விதி. நினைவிருக்கட்டும்.

*பெங்களூரைச் சேர்ந்த எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம்.

*பெங்களூர்வாசிகளாக அல்லாத பட்சத்தில் பெங்களூர் வந்தபோது எடுத்த படங்களைக் கொடுக்கலாம். நம்பிக்கையின் பேரில் நடத்தப்படும் இப்போட்டி விதிகளுக்குக் கட்டுப்பட்டு படங்கள் கண்டிப்பாக பெங்களூரில் எடுத்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

*பரிசுக்குரிய படங்கள் போக தேர்வாகும் படங்கள் ‘தளம்’ அரங்கில் மார்ச் 8,9 தேதிகளில் காட்சிப் படுத்தப்படும். அதற்கான சட்டமிடும் செலவான ரூ.500_யை ஒளிப்படக் கலைஞர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

*படங்களை வலையேற்றக் கடைசித் தேதி: 24 பிப்ரவரி 2014, நள்ளிரவு 12 மணி.

பரிசு மட்டுமே நோக்கமாக இன்றி சமுதாய விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் தரும் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பால் போட்டியையும், கண்காட்சியையும் சிறப்பியுங்கள்.

**

இந்தப் போட்டிக்கான கடைசித் தேதி 1 மார்ச் 2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது:


மார்ச் 8,9 தேதிகளில் நடைபெறவிருந்த ஒளிப்படக் கண்காட்சியும் 15,16 தேதிகளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
***

Saturday, July 20, 2013


தி இந்து நாளிதழின் ஷட்டர்பக் அறிவித்திருக்கும் அகில இந்திய அளவிலான இம்மாதப் போட்டி ‘உழைக்கும்  முதியோர்’.

வயிற்றுக்காக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் சிலர்; உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் மன பலத்துடன் வாழும் வரை தன் காலில் நிற்கவேண்டும் என்கிற உறுதியோடு சிலர்; தள்ளாத வயதிலும் குடும்பத்துக்கான தம் பங்களிப்பைக் கொடுத்தாக வேண்டிய சூழலில் சிலர் எனக் காரணங்கள் வெவ்வேறாக இருப்பினும் நாடெங்கிலும் இவர்களது எண்ணிக்கை அதிகரித்தபடியேதான் இருக்கிறது.

இது குறித்த ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கத்துடன் பிர்க்பெக் பல்கலைக் கழகம், லண்டன் மற்றும்  மனித உரிமை காப்புறுதி ஆய்வு மையம், சென்னை ஆகியவற்றோடு கை கோர்த்து ‘தி ஹிந்து’  இப்போட்டியை அறிவித்திருக்கிறது.  இந்நிலையில் மாற்றம் கொண்டு வர இந்த ஆய்வு உதவும் என நம்புகிறது.

பரிசு விவரங்கள்:

முதல் பரிசு ரூ.20000/-, இரண்டாம் பரிசு ரூ.10000/-; மூன்றாம் பரிசு ரூ. 5000/- மற்றும் 3 ஆறுதல் பரிசு பெறுகின்றவருக்குப் பாராட்டுப் பத்திரங்கள். வந்துபடியே இருக்கும் ஆயிரக்கணக்கான படங்களில் அதிக வாக்கு பெறும் ஒரு படத்துக்கு ரூ.5000/-. உழைக்கும் முதியோர் நிலை குறித்த செய்தி எல்லோரையும் சென்றடைய வேண்டும், பலரும் படங்களை பார்வையிட வேண்டும் எனும் நோக்கத்துடன் வாக்களிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் அமைப்பாளர்கள் அதற்கானக் கடைசித் தேதி 28 ஜூலை  இரவு 11 மணி வரையில் என அறிவித்து ஒருமாத காலம் ஒதுக்கியிருக்கிறார்கள். போட்டி முடிவுகள் 31 ஜூலை இணையத்திலும், 4 ஆகஸ்ட் பத்திரிகைகளிலும் வெளியாகும்.  விரிவாக இதைப் பற்றி அறிய இங்கேயும் விதிமுறைகளுக்கு இங்கேயும் செல்லலாம்.

விதிமுறைகள் தமிழில் இங்கேயும்:

படங்கள் அனுப்பக் கடைசித் தேதி, நாளை 21 ஜூலை இரவு 11 மணி .

* படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
* இந்தியாவுக்குள் கடந்த 12 மாதங்களுக்குள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
* ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
* படங்களின் அளவு 1.5 MB-க்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம். அவர்கள் கேட்கும் பட்சத்தில் அதிக ரெசலூஷனில் (பிக்ஸலில்) கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
* உங்களுக்குப் பிடித்தமான எத்தனை படங்களுக்கும் வாக்களிக்கலாம். ஆனால் ஒருவர் ஒரு படத்துக்கே வாக்களிக்க இயலும்.
* இணையம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

பரிசுகளைத் தாண்டி, ஒரு நல்ல நோக்கத்துடன் நடைபெறுகிற போட்டிக்கு உங்கள் பங்களிப்பையும் தரலாமே. நாளை இரவு வரை இருக்கிறது நேரம்.
***


 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff