Monday, July 23, 2012

பறவைகளைப் படம் பிடிப்பது என்பது ஓடி ஆடித் திரியும் சின்னஞ் சிறு குழந்தையைப் படம் பிடிப்பதை விடக் கடினமான ஒரு காரியம். காரணம் குழந்தை பல சமயங்களில் உங்களை நோக்கி வரும். ஆனால் பறவையோ மனிதர்களைக் கண்டால் தங்கள் பின் புறத்தை உங்களுக்குக் காட்டிக் கொண்டு பறந்து சென்றிடும். அப்படி என்றால் எப்படி பறவைகளின் அழகான படங்களைப் பலர் எடுக்கின்றனர்? அதைப் பார்ப்போம் இப்போது.

உங்கள் நண்பர் ஒருவரை நீங்கள் சந்தித்துப் பேச விரும்புகிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? அவர் வீட்டிற்குச் செல்வீர்கள். அல்லது அவர் வேலை செய்திடும் அலுவலகத்திற்குச் செல்வீர்கள். இதே தான் பறவைகள் விஷயத்திலும் நீங்கள் செய்ய வேண்டும்.

ஒரு பறவையின் வீடு என்பது அதன் கூடு. அலுவலகம் என்பது அது இரை தேடும் இடம். எனவே இவை இரண்டில் ஒன்றினை நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும்.

கூட்டினைக் கண்டு பிடிப்பது எப்படி?

ஒரு பறவை தன் அலகுகளில் ஒரு குச்சியையோ, புல், வைக்கோல், பஞ்சு இவற்றில் ஏதேனும் ஒன்றையோ எடுத்துச் சென்றால் அது கூடு கட்ட ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். அதே போல ஒரு பறவை தான் எடுத்த, அல்லது பிடித்த இரையை அங்கேயே உண்டிடாமல் எடுத்துச் சென்றால் அதற்கு ஒரு கூடு இருக்கிறது. அதில் குஞ்சுகள் இருக்கின்றன என்று அர்த்தம்.

மேற் சொன்ன இரு காரியங்களில் எது ஒன்றை ஒரு பறவை செய்தாலும் அதை நீங்கள் உங்கள் கண்களாலும் உடலாலும் தொடர்ந்து செல்வீர்களானால் உங்களால் அதன் கூட்டினைக் கண்டு பிடித்து விட முடியும். இப்போது பாதி கிணறு தாண்டி விட்டீர்கள். இனி மீதிப் பாதி.

# 1 ஏஷி ரென் வார்ப்ளர் என்னும் பறவை தன் கூட்டருகே..

(படம் நடராஜன் கல்பட்டு)

கூட்டைக் கண்டு பிடித்தாயிற்று. இனி....?

பறவைகளைப் படம் பிடிக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று “கூடு வழி” (Nest technique). மற்றது டெலிபோட்டோ லென்ஸ் பொறுத்திய கேமிராவினால் எடுப்பது.

முன்னதில் கேமிராவும் தேவையானால் ஃப்ளேஷும். கூட்டின அருகில் ஸ்திரமாகப் பொறுத்தப் படும். பறவையின் கூடு ஃபோககஸ் செய்து வைக்கப் படும். பின்னர் துரத்தில் மறைந்திருந்தோ அல்லது ஒரு கூடாரத்திற்குள் அமர்ந்திருந்தோ ஷட்டரை இயக்கிடும் உபகரணங்கள் உதவி கொண்டு பறவை கூட்டில் வந்தமர்ந்திடும் போது படம் பிடிக்க வேண்டும்.

இவ் விஷயங்கள் பற்றியெல்லாம் நான் கற்றது திரு பெருமாளிடம் இருந்து தான்.
# 2
(சிரித்திடாதீர்கள் என் படம் வரைந்திடும் திறமை பார்த்து)

முன் நாட்களில் வாயு கொண்டு இயக்கப் படும் பிஸ்டன் அல்லது பலூன் உள்ளடக்கிய கருவி ஒன்று ஒரு சிறு கம்பியை வெளித்த் தள்ளும். அக்கம்பி ஷட்டரை இயக்கிடும். வாயு கொண்டு இயக்கப்படும் பிஸ்டன் கொண்ட கருவி ஒன்றினை நான் வாங்கினேன். பின்னர் வீடுகளில் முன்பெல்லாம் உபயோகிக்கும் படுக்கையில் இருந்து இயக்கிடும் ஸ்விட்ச் ஒன்றினை வாங்கி அதன் குடலை உருவி விட்டு ஒரு குட்டி ரப்பர் பலூன், சிறிய பிளாஸ்டிக் மூடி இவற்றைக் கொண்டு நானே ஒரு கருவியையும் செய்து வைத்துக் கொண்டேன். இக் கருவி எனது ட்வின் லென்ஸ் கேமிராவை இயக்கப் பயன் பட்டது. இது என்னிடம் இல்லாதிருந்தால் பெரிய ஆந்தை படம் ஒரே சமயத்தில் கலரிலும் கருப்பு வெள்ளையிலும் என்னால் எடுத்திருக்க முடியாது.

(நான் கடையில் வாங்கிய கருவியையும், வீட்டில் தயார் செய்து வைத்திருந்த கருவியையும் படம் பிடித்துப் போடலாம் என்றெண்ணி கடந்த ஒரு மணி நேரம் என் வீடு பூராவும் தெடினேன். கிடைக்க வில்லை.) :-((

இந்நாட்களில் ஒளிக் கதிர்கள் கொண்டு கேமிராவை இயக்கிடும் கருவிகளும் வந்து விட்டன.

பறவைகள், விலங்குகள் இவற்றைப் படம் பிடிக்கப் போதும் போது உங்கள் உடை விஷயத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். வெள்ளை ஆடை அணியக் கூடாது. பழுப்பு நிற (ப்ரௌன் அல்லது காக்கி) ஆடையோ அல்லது ராணுவத்தினர் காடுகளுக்குள் சென்று போர் புரியும் போது அணிந்திடும் இலைகள், மலர்கள் படம் போட்ட ஆலிவ் க்ரீன் ஆடைகளோ அணிய வேண்டும்.

‘கூடு வழி’ முறையில் படம் பிடிக்கும் போது சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆர்வத்தினால் சுமார் பதினைந்து நிமிஷங்களுக்கு மேல் நீங்கள் கூட்டின் அருகில் இருந்தீர்களானால் தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு இரை கொடுக்காமல் இருக்குமாதலால் குஞ்சுகள் இறந்து விடும்.

உங்கள் கேமிராவிற்கு நல்ல காட்சி தெரிய வேண்டும் என்பதற்காக கூட்டின் முன்பிருக்கும் இலை கிளைகளை வெட்டி எடுத்து விட்டீர்களானால் காகம் போன்ற பறவைகள் கூட்டினை எளிதாகக் கண்டு பிடித்துக் குஞ்சுகளைக் கொன்று தின்று விடும். மறைத்திடும் இலை, கிளைகளை ஒரு மெல்லிய நூல் கொண்டு வேறு புறம் இழுத்துக் கட்டிடுதல் நல்லது.

எக்காரணம் கொண்டும் குஞ்சுகளைக் கையினால் தொடாதீர்கள். அப்படித் தொடப் பட்ட குஞ்சுகளை பல சமயம் தாய்ப் பறவை கூட்டை விட்டு வெளியே தள்ளிவிடும்.

இம் மூன்றினையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் பறவைகளின் சந்ததி வந்திடலைத் தடை செய்தவர்களாகி நீங்களே பறவைகளுக்கு எமனாகி விடுவீர்கள். சில சமயங்களில் பயந்து போன தாய்ப் பறவை கூண்டிற்கு நிறந்தரமாகத் திரும்பாமலே போய் விடலாம். இதுவும் ஒரு பரிதாபமான நிகழ்வு.

பெருமாளுடன் சென்று நான் பிடித்த முதல் படம் இதோ:
# 3

பார்ப்பதற்கு ஒரு சிட்டுக் குருவி போலிருக்கும் இப் பறவையின் பெயர் பைடு புஷ் சேட் (Pied Bush chat) என்பதாகும். இது பங்களூரில் இருந்து சுமார் பத்துப் பதினைந்து கிலோ மீடர் தூரத்தில் இருந்த் ஒரு கிராமத்தில் ஒரு வைக்கோல் போரில் கூடு கட்டி இருந்தது. இந்த முதல் முயற்சி எனக்கு மிகுந்த ஊக்கத்தினை அளித்தது. இரவு பகல் என்னேரமும் இதே சிந்தனையாய்க் கழிந்தன அடுத்த மூன்றாண்டுகள்.
***


Legend Talks..




திரு கல்பட்டு நடராஜன்



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Sunday, July 22, 2012

இத் தொடரின் முதல் கட்டுரையில் திரு உபேந்த்ரா என்பவர் என்னை திரு டி.என்.ஏ. பெருமாள் என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்று சொன்னேன்.

#1 டி.என்.ஏ.பெருமாள்பெருமாள் பறவைகள், விலங்குகளை படம் எடுப்பதில் நிபுணர். அவரை சந்தித்த முதல் நாளில் இருந்து அவர் எனக்குக் குருநாதரானார். அன்று முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பெருமாள், உபேந்த்ரா, நான் ஆக நாங்கள் முவரும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் காடு மேடுகளில் சுற்றித் திரிந்தோம் விலங்குகள், பறவைகள் இவற்றைப் படம் பிடித்திடும் நோக்கில்.

எனது அனுபவங்கள் பற்றி எழுது முன் பெருமாள் எடுத்த சில படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

# 2 பந்திபூர் சரணாலயத்தில் ஒரு புலி



# 3 பந்திபூர் சரணாலயத்தில் ஒரு காட்டு யானை



# 4 சிங்கம்

# 5 கோடுகள் போட்ட ஆந்தை

(இந்தப் படம் குறுக்கிடும் ஒளிக் கதிர்களால் இயக்கப் பட்ட கேமிரா கொண்டு எடுத்தது.)

பெருமாள் அதிகம் பேச மாட்டார். அவருடன் சுற்றியதில் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அவரை சந்தித்திரா விட்டால் நான் பறவைகள் படங்கள் எதுவுமே எடுத்திருக்க முடியாது. பல பறவைகளைப் பற்றி அறிந்திருக்கவும் முடியாது.
பெருமாளின் கூற்றுப் படி, “ஒரு நல்ல படம் அலமாரி நிறைய உள்ள புத்தகங்களைக் காட்டிலும் சிறந்த விளக்கம் அளித்திடும் ஒரு பறவை அல்லது விலங்கு பற்றி.”

பறவைகளைப் படம் பிடிக்க விரும்புவோருக்கு பெருமாள் சொல்லும் அறிவுரைகள் பற்றி அறிய வேண்டுமா? படியுங்கள்:



Legend Talks..








திரு கல்பட்டு நடராஜன்



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Saturday, July 21, 2012

எறியும் குப்பையில் இருந்து எழும் புகையோ, அல்லது களத்து மேட்டில் எழும் தூசியோ, மூடு பனியோ அழகான புகைப் படங்களை உங்களுக்கு அளித்திடும் உங்களுக்கு அழகினை ரசித்திடும் கண்கள் இருந்தால். அந்தப் படங்களில் வெரும் புகையோ பனியோ இருந்தால் போதாது. வேறு சிலவும் இருந்திடல் வேண்டும். இந்தப் படங்களைப் பாருங்கள். அப்போதுதான் அவை கதை சொல்லும். கண்களைக் கவரும்.

(படம் எடுத்தது: நடராஜன் கல்பட்டு)

இந்தப் படத்தில், “மாடுகள் வெட்டுப் பட்டிருப்பது ஒரு குறையாகாதா?” என்று கேட்கலாம். ஆனால் அவை வெளியில் இருந்து படத்தின் உள்ளே வருவதாலும் அவை களத்து மேட்டின் கதையைப் பூர்த்தி செய்வதாலும் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றாது.

இதோ இந்தப் படத்தில் ஆடுகள் கிளப்பிடும் புழுதியே படத்திற்கு உயிர் ஊட்டுகிறது,


(படம் எடுத்தது: சி.ராஜகோபால்)

நீங்களும் எடுத்திடலாம் இவ்வகையான படங்களை.


Legend Talks..
தொடருகிறார் திரு கல்பட்டு நடராஜன்











தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


புகைப்பட அனுபவங்கள் (01) - LEGEND TALKS


புகைப் பட அனுபவங்கள் (2) மையப் புள்ளிகள்

என் புகைப் பட அனுபவங்கள் (3) வெட்டும் கோடுகள்


என் புகைப் பட அனுபவங்கள் (4) இழுத்துச் செல்லும் கோடுகள் (LEADING LINES)


என் புகைப்பட அனுபவங்கள் (5) படத்தினுள் கோடுகள்


என் புகைப் பட அனுபவங்கள் (6) - தவிர்க்கப் பட வேண்டியவை

Sunday, July 1, 2012

வணக்கம் நண்பர்களே,
மீண்டும் உங்களை மாதாந்தப் போட்டியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
  • இந்த மாதத் தலைப்பு "காகிதம்".
  • போட்டிக்கான விதிமுறைகள் இங்கே
  • படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 15-07-2012


தலைப்பு: காகிதம் (paper)
காகிதம் அல்லது தாள் அல்லது கடதாசி இந்த தலைப்புக்கு ஏற்ற படங்களை முடிவுத் திகதிக்குள் அனுப்பி விடுங்கள். காகிதத்துடன் தொடர்புடைய எதுவும் படமாக அமையலாம். புத்தகம், ஒரிகாமியில் செய்யப்பட்ட காகித உருவங்கள், பணம் (நோட்டுத்தாள்), காகிதத்தால் சுற்றப்பட்ட பொருட்கள், செய்தித்தாள் சுவரொட்டி, இப்படி எதுவாகவும் இருக்கலாம்.


தலைப்புக்குப் பொருந்தமான படம் எடுத்தால் பாதி வெற்றி. மீதி வெற்றி ஒளிப்படக்கலையின் அடிப்படைகளையும் நுட்பங்களையும் அதில் உள்வாங்கியிருப்பது. இறுதியில் படைப்பாற்றலை (creativity) பயன்படுத்துவது. இதையெல்லாம் எங்கு கற்பது? இங்கேயே கிட்டத்தட்ட 500 பதிவுகள் உள்ளன. நிச்சயம் அவை உங்களுக்கு உதவ முடியும்.


தலைப்பிற்கு சில உதாரணங்கள் பின்வருமாறு:


# நவ்ஃபல்


# நவ்ஃபல்

# நவ்ஃபல்

# ராமலக்ஷ்மி

Thursday, June 28, 2012

சீர்/Uniformity போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களில், முந்திய பத்து படங்களைப் பார்த்திருப்பீர்கள்.
முதல் மூன்று இடம் பெற்ற படங்களை இனி பார்க்கலாம். சென்ற பதிவில் சொன்னது போல், போட்டியில் கலந்து கொள்பவர்களில் அநேகம் பேர் மிகத் திறமையுடன் கலக்குகிறார்கள். ஆனால், இன்னும் பலர், அடிப்படை விஷயங்களை கவனிக்காமல், பொத்தாம் பொதுவாக, படங்களை க்ளிக்கி, எடுத்த படங்களை மெருகேற்றாமல் அனுப்புகிறார்கள்.

போட்டியில் கலந்து கொள்வதில் இருந்தே, உங்களுக்கு புகைப்படக் கலையின் மீது இருக்கும் ஆர்வம் புலப்படுகிறது. சற்று நேரம் ஒதுக்கி, நம் தளத்தில் இருக்கும், அடிப்படை பாடங்களை அலசி, வெற்றி பெறும் மற்ற படங்களை பார்த்து அவதானித்து, அதனுள் இருக்கும் நுணுக்கங்களை புரிந்து கொண்டு, அடுத்த க்ளிக்கு க்ளிக்கும்போது, இன்னும் ஒரு படி மெருகேற்றி எடுக்க வாழ்த்துக்கள்.
யூ கேன் டூ இட்! :)

இன்னும் ஒரு முக்கிய டிப்பு தரேன் புடிச்சுக்கோங்க. டிஜிட்டல் யுகத்தில், எவ்வளவு படம் எடுத்தாலும், செலவு பெருசா ஆகரதில்லை. அதனால, ஒரு காட்சியை, ஒன்றுக்கும் மேற்பட்ட கோணங்கள், அளவுகோல்களைக் கொண்டு படம் பிடியுங்கள். அவற்றில், நல்லதை மட்டும் எடுத்து, சிறிது பிற்சேர்க்கை செய்து, (atleast, white balance fixing) போட்டிக்கும், உங்கள் ஆல்பங்களிலும் அப்லோடுங்கள். இப்படி செய்தாலே, பாதி கிணறு தாண்டிய மாதிரிதான்.

நானெல்லாம், நூறு படம் எடுத்தால், அஞ்சோ ஆறு படம் தான் ஓரளவுக்கு பார்க்கும்படி இருக்கும். அவற்றை மட்டுமே, என் தளத்திலும் ஆல்பத்திலும் பதிகிறேன். அப்பத்தான், இவரும் ரவுடிதான்னு ஒரு கெத்தோட அலைய முடியும். படம் பிடிக்கர எல்லா படத்தையும் பதிவில் ஏத்தினா, என்னை PiTல் இருந்து தூக்கிருவாங்க :)ஸோ, ஷேர் வித் கேர்!

இனி வெற்றிப் படங்களைப் பார்ப்போம்..

மூன்றாவது இடத்தில், Viswanathaன் பேப்பர் கப்பு படம். பளிச்சென்ற கலர். வசீகரிக்கும் சப்ஜெக்ட்டு. கண்ணை உறுத்தாத 'சீரான' கட்டம். அழகு. வாழ்த்துக்கள் Viswanath.


இரண்டாம் இடத்தில், துரை. க்ரியேட்டிவ் ஷாட். தலைப்புக்கு ரொம்பப் பொறுத்தமாய். நட்ட நடுவில் வைத்து கட்டம் கட்டாமல், கொஞ்சம் இடது ஓரமாய் வைத்து படம் பிடித்ததும் ஈர்ப்பை அதிகரிக்கிறது. கலக்கிட்டீங்க துரை.


முதல் இடத்தில், Udhayan. வலது ஓர ஆரஞ்சு ஆசாமி விளக்குடன் நம்மை ஈர்க்கிறார். அப்பட்டியே, கண் தானாய் அவரின் வலது பக்கத்தில் இருக்கும் மத்த ஆசாமிகளிடம் அழைத்துச் செல்கிறது. பின்னாலிருக்கும் ஆட்கள் கண்களை உறுத்தாமல் இருப்பதும் சிறப்பு. தலைப்புக்கு வெகு பொறுத்தமாய் இருக்கிறது. அதே சமயம், மற்ற படங்களைப் போல் ஒரு செயற்கைத் தனமான 'சீர்' இல்லாமல், இயற்கையாய் அமைந்தது மிகச் சிறப்பு. வெகுவாய் கவர்ந்தது. உதயன், வாழ்த்துக்கள். நன்றீஸ்!


Rajkumarன் படம் அழகாய் இருந்தாலும், கலர் கொஞ்சம் கூடிப் போய், திகட்ட வைத்தது.MervinAnto படம் நேர்த்தி. ஆனால், போலீஸின் பேக் ஷாட் இல்லாமல், இன்னும் கொஞ்சம் நடுவில் சென்று எடுத்திருந்தால், ஒரு உறுத்தல் இல்லாமல் இருந்திருக்கலாம் :)

கலந்து கொண்டவர்களுக்கு நன்றீஸ். அடுத்த மாதமும் கலந்து கலக்குங்க.

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff