Thursday, October 1, 2015

செப்டம்பர்-15 போட்டி முடிவுகள்

4 comments:
 
வணக்கம் நண்பர்களே,

இந்த மாத போட்டி எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே. ஆமாம்.. வெறும் 15 படங்களே போட்டிக்கு வந்திருந்தன. ஏற்கனவே இருக்கும் படங்களை அனுப்பி வந்த நமக்கு, இந்த தலைப்பு புதிதாய் படம் எடுக்கப் பணித்ததுதான் காரணம் என நினைக்கிறோம். இந்தக் கலையை நன்றாக படிக்க வேண்டுமானால், நிறைய புதிது புதிதாய் படம் எடுக்க வேண்டும். சோம்பல்தான் எதிரி.

சரி, படங்களுக்கு வருவோம். எல்லாருமே இந்த தலைப்பு அறிவித்தவுடன் முயற்சி எடுத்து படம் எடுத்திருக்கிறார்கள். சிலர் தெருவில் இறங்கிகூட படம் எடுத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்! இந்த அர்பணிப்புதான் தேவை.

சிறப்புக் கவனம் பெற்ற படங்கள்:

கண்ணதாசன்
 கார்த்திக் பாபு

சதீஷ் குமார்

மூன்றாமிடம் - சதாசிவம்
தேநீர் குடிக்கும்போது உள்ள முக உணர்வை அழகாக படமாக்கியிருக்கிறார். வலது பக்கம் தெரியும் கருப்பு பட்டை கொஞ்சம் கவனத்தை சிதைக்கிறது. நல்ல கலர் டோன்.


இரண்டாமிடம் - ஜே.பி. கார்த்திக்
தெருவில் இறங்கி முயன்றதற்கு கிடைத்த பரிசு இந்தப் படம். நண்பர்கள் தேநீர் குடிக்கும் போது எடுத்திருக்கிறார். இயல்பான படம். இடப்புறம் நிற்பவர் முழுமையாகத் தெரிந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்.


முதலிடம் - பிரேம்நாத் 
ஆகா, பெரும்பாலான வீடுகளில் காலை நேரம் காணக்கிடைக்கும் காட்சி இது. அற்புதமான ஒளியில் படமாக்கியிருக்கிறார். வாழ்த்துகள்!

வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும்  வாழ்த்துகள்!

4 comments:

  1. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    எனது புகைப்பட கருவி பழுதான காரணத்தினால் என்னால் சென்றமாதப் போட்டியில் படத்தை அனுப்பமுடியாவில்லை :( :'( :'(

    ReplyDelete
  2. பிட் நடுவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வணக்கங்கள்,,,
    வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்பு பகுதியில் தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    எனது புகைப்படம் 2ம் இடத்தில் வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சி...

    பிட் தேர்வு குழுவினர் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

    ஜே.பி. கார்த்திக்

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி.... வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff