Showing posts with label Osai Chella. Show all posts
Showing posts with label Osai Chella. Show all posts

Thursday, April 10, 2008


PiT ஆரம்பம் மிகவும் எளிமையான இனிமையான ஒரு வலையுலக நிகழ்வு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து அதிகம் இருக்காது என்று நினைக்கிறேன். அதே சமயம் இந்த புகைப்படப் போட்டி, பாடங்கள், படங்கள், பட்டறைகள் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளரும் இந்த இணையக்குழுவினரின் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை புகைப்படச் சுற்றுலாக்கள். நண்பர் ஜீவ்ஸ் மற்றும் மங்களூர் சிவா அவர்கள் ஒருங்கிணைப்பில் 17 புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் நண்பர்கள் பெங்களூரிலிருந்து ஒரு வெள்ளி இரவு வாடகை சிற்றுந்தில் கூர்க் நோக்கி பயணமானோம்... (பயணிக்கும் போது புதியவரான லக்குவனாரை செமையாக கலாய்த்தது தனிக்கதை.. ). அதிகாலை 5.30 மணிக்கு கூர்க் மாவட்டத்தின் தலைநகரான மடிக்கேரி சென்றடைந்தோம். மேகங்களூடே மலைமுகடுகள் துறுத்திக்கொண்டிருந்த அற்புதகாட்சி.. என் கண்ணுக்குள்ளே இன்னும் விரிகிறது! மதியம் ஒரு சிறு ஓய்வுக்குப் பின்பு தலைக்காவிரி நோக்கி பயணமானோம். வழியெங்கும் காபித்தோட்டங்கள்.. தலைக்காவிரியில் ஒரு சிறுகுழாயில் தண்ணீர்வடிவது போல் ஊற்றாகப் பிறக்கிறாள் காவிரித் தாய். அருமையான காட்சிகள் பலவற்றை படம்பிடித்து மீண்டும் மடிக்கேரி வந்தடைந்தோம். அன்றைய சனி இரவுக் கொண்டாட்டம் கலைகட்டியது.. பின்னவீனத்துவம் முதல் பதிவுலக நிகழ்வுகள் வரை மிக மிக நகைச்சுவையோடு (சிபியும், மோகன் தாசும் இளவஞ்சியும், சிவாவும், நிலா அப்பாவும் இருக்கையில் கலகலப்புக்கு என்ன பஞ்சம்!) நடுஇரவுவரை அலசிமுடித்து படுக்கச்சென்றோம். அதிகாலை ஆறுமணிக்கு மீண்டும் மைசூர் நோக்கி பயணமானோம்.... தொடரும்

திரும்பி வரும்போது தங்கக் கோவிலில் நான் க்ளிக்கிய சில படங்களின் ஒரு சிறு தொகுப்பு... (அடுத்த பதிவில் இளவஞ்சி, ஐய்யப்பன், மோகன்தாஸ், நந்து, லக்குமணராஜா போன்றவர்களின் படங்களில் சிலவும் பதிப்பிக்கப் படும்!)

படத்தை க்ளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்!

Saturday, February 23, 2008



மேலே நீங்கள் பார்ப்பது ஒரு அழகிய விளம்பர புகைப்படம்..காலணி நிறுவனம் ஒன்றிற்காக எடுக்கப்பட்டது. முதலில் சில கேள்விகள்..

1. இந்த படத்திற்கு எத்தனை முதன்மை ஒளி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன?

2. ஏன் சிவப்பு நிறம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது?

3. வெளியில் நாம் எடுக்கும் இயற்கை படங்களுக்கும் ஸ்டுடியோவில் எடுக்கப்படும் இந்த மாதிரியான படங்களுக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளன?

உங்கள் கருத்துக்களை/பதில்களை எழுதுங்களேன்!

அன்புடன்
ஓசை செல்லா

Saturday, February 16, 2008



க்ளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்...
Exposure Details: f8, 12 Sec, ISO 100

அந்திசாயும் அற்புத கணங்களில் உங்கள் காமிராவையும் கண்சிமிட்டவிடுங்கள்.. வர்ணஜாலங்கள் உங்கள் மனத்தை ரம்மியமானதாக மாற்றும்... மாற்றுகிறதா??!

Sunday, October 21, 2007

அட இந்த மாத புகைப்படப் போட்டி படங்களைப் பார்த்ததும் எச்சில் ஊறியது உண்மை! சரி அவற்றில் எனக்குப் பிடித்த இரண்டுபடங்களை பிரேம் போட்டு மாட்டினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை!


Saturday, August 25, 2007












பொதுவாக நாம் அனைவரும் ஒரு நிகழ்ச்சியைஎடுக்கப்போனால் அதில் மட்டுமே மனதை செலுத்தாமல் அதைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும்எடுப்பது மிகவும் அழகான ஆல்பத்திற்கு வழி வகுக்கும். மேலே கோவை ரேஸ் போட்டி ஒன்றுக்கு நான் சென்றபோது க்ளிக்கிய சில படங்கள். க்ளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்!

பிகு: இதில் ஒரு படம் கலந்துவிட்டது. அது எந்தப்படம் என்று முடிந்தால் சொல்லுங்கள். அவர் பிரபல வ-வா-வலைப்பதிவர்!

Friday, August 17, 2007

மிக்க நன்றி முதலில்... எங்கள் முன் உங்கள் படைப்புகளை வெளியிட்டதற்கு. நான் இந்த படங்களை வைத்தே ஒரு போர்ட்ராய்ட் தொடரை எழுத இருக்கிறேன். நாங்கள் அனைத்து படங்களையும் ஸ்டாம்ப் சைஸ் ஆக்கி ஒரே படமாக collage ஆக மாற்றினோம். 90 படங்களுக்கு மாற்றவே ஒரு 4 மணி நேரம் ஆனது! பின் அவற்றீன் மீது புள்ளிகள் வைத்து நன்றாக இருந்தவற்றை பொறுக்கினோம். மொத்தம் 11 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. பின் இந்த பதினொண்ரையும் ஓடவிட்டோம். இங்கு தான் போட்டியின் கடுமை புரிந்தது. உதாரணமாக பக்கத்தில் இருக்கும் புகைப்படத்தை பாருங்கள். பதிவர் பாரதிய நவீன இளவரசன் அவர்களின் ஒரு படத்தை நான் கைவத்தபோது ஒரு க்ளாசிக் போர்ட்ராய்ட் மறைந்திருப்பது தெரிந்தது! பொதுவாகவே இவரது இரு படங்களும் மற்றும் சுந்தரின் இரு படங்களும் மிக அற்புதமான லைட்டிங் சென்ஸோடு எடுக்கப்பட்ட படங்கள் தான். ஆனால் ஒப்பாரி முன்னேறியது எதனால்...

டெக்னிகள் விசயங்கள் இருந்தாலும் அழகு ஒன்று உள்ளது. அதுஎந்த விதிக்கும் கட்டுப்படாத ஒன்று. அந்த மாதிரியான ஒரு அழகான இயல்பான எளிமையான சிரிப்பு (Expression and timing of the image!) மிகவும் சூப்பர். எனவே தான் அது மூன்றாம் இடம் பிடித்தது. இதற்கும் வேரொரு போட்டி இல்லாமல் இல்லை ... அது ஹரன் அனுப்பிய அழகுச் சிரிப்பு... ஆனால் சில விசயங்கள்.. ஒன்று அதன் கருப்பு பிண்ணணி.. டெக்சர் ஏதும் இல்லாமல்.. மேலும் கழுத்துக்கு கீழே இடதுபுறம் (பையனுக்கு) தோள்பட்டை சரியாகத் தெரியாமல் பேலன்ஸ் இல்லாமல் (கையே தெரியாமல் ஒரு தோற்றம்) . இருந்தாலும் ஹரனுக்கும் என் வாழ்த்துக்கள்! கடும் போட்டி கொடுத்துள்ளீர்கள்.

மற்றவை அடுத்த பார்வையில் .. ( அலுவலக வேளை நிறைய சேர்ந்து விட்டது!)

பிகு: மேலே உள்ள நவீன இளவரசனின் படத்தில் (பெரிதாக்கிப் பார்க்க) என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்? என்ன மென்பொருள் எபெக்ட் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்! ( crop, contrast தவிர்த்து!)

Related Posts

Friday, August 3, 2007

பதிவர் சத்தியா, அழகான படங்களை அனுப்பும் ஒரு பதிவர். அவரது இந்தப் பதிவில் கீழ்கண்டவாறு சொல்லியிருந்தார்...

"அதென்னவோ கறுப்புவெள்ளை மாதிரி உணர்ச்சிகளை மட்டும் காண்பிக்க வண்ணப்படங்கள் வரமாட்டேன் என்கிறது."
ஆம்.. பல்வேறு சமயங்களில் நிறங்களை விட கருப்பு வெள்ளைக்கு உணர்ச்சிகளின் ஆழத்தைக் கூட்டும் சக்தி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனாலே விளம்பரப்படங்கள் உலகின் "மெக்கா" என்று அழைக்கப்படும் மாடிசன் அவென்யூ, நியூயார்கில் உருவான ஒரு சில ஜீன்ஸ் பற்றிய விளம்பரங்கள் இன்றும் கருப்பு வெள்ளையில் வந்துகொண்டிருக்கின்றன!!

சரி...ஒரு சோதனை செய்து பார்ப்போம். போட்டிக்குள்ளே போட்டி... தோழியர் காட்டாறு அவர்கள் அனுப்பிய ஒரு படத்தை எனக்குப் பிடித்தபடி சிறீது வெட்டி கருப்புவெள்ளையாக்கியுள்ளேன். இரண்டு படங்களில் உங்கள் ஓட்டு கலருக்கா அல்லது கருப்பு வெள்ளைக்கா?..பின்னூட்டத்தில் வாக்களியுங்கள்..உங்கள் கருத்துக்களோடு!

கலரா?



கருப்பு வெள்ளையா


யாருக்கு உங்கள் ஓட்டு? கலருக்கா, கருப்பு வெள்ளைக்கா?

சீ.வீ.ஆரின் சேர்ப்பு!!
---------------------
அப்படியே Sepia-லையும் மாத்தி பாத்தேன்!!
எப்படி இருக்குன்னு பாத்து சொல்லுங்க!! :-)

Saturday, July 28, 2007

போர்ட்ரைட் படத்திற்கான முக்கியத் தேவைகள் டிஜிடலில் எடுத்தாலும் ஃபிலிம் கேமராவில் எடுத்தாலும் பொதுவானவை.

போட்டி வேற வச்சுட்டம், போர்ட்ரைட் எப்படி எடுக்கறதுன்னு தெரியும் ஆனா அதை எப்படி சிறப்பா கொண்டுவர்ரதுன்னு தெரியலைங்கறவங்க மேலே (அட கீழங்க) படிக்கலாம்.


சின்னச் சின்னக் குறிப்புகள்.
போர்ட்ரைட் படம் எடுக்கும்போதும் நாம் கவனிக்கவேண்டிய காரணிகளில் சில

1 - வெளிச்சம் - ( ligthing)
2 - படத்தில் இடம்பெற இருக்கும் துணியின் அமைப்பு மற்றும் வண்ணங்கள்.
3 - படம் எடுக்கப்படும் பின்னனி. இவையெல்லாம் இருந்தாலும் மிக முக்கியமாக
4 - போட்டோவிற்கு ஒத்துழைக்கும் சப்ஜெக்ட் ( செந்தழல் என்னமோ சொல்ல வரமாதிரி தெரியுது :-? )


முடிந்த வரை சப்ஜெக்டோட eye-contact இருக்கிற மாதிரி முயற்சி செய்யுங்க. இல்லாட்டா போட்டோ வேறெங்கேயோ பாக்கற மாதிரி இருக்கும். கேட்சியா இருக்காது ( சில விதிவிலக்குகள் தவிர்த்து )

கேமராவை சப்ஜெட்டுக்கு மிக அருகில் கொண்டு சென்று போட்டோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நன்றாக வரவேண்டிய போட்டோ.. அலங்கோலமாகி அசிங்கமாக இருக்கும். முக்கியமாக வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ள கேமராக்களில் இது அவசியம். மிக அருகில் இருந்து ஜூம் செய்து எடுப்பதையும் தவிர்த்தல் நலம்.


இரவு நேரங்களில் ஃபிளாஷ் போட்டு எடுக்கும் போது slow sync flash ஆப்ஷனை வைத்து எடுங்கள். இல்லாவிட்டால் பிண்ணனி இருட்டடிப்பு செய்யப்படும்.

அதே போல ரெட் ஐ வராமல் இருக்க red eye ஃப்ளாஷ் ஆப்சன் வைத்து எடுக்கவும். இல்லாவிட்டால் கண்கள் சிவந்து மெட்ராஸ் ஐ வந்ததை விட மோசமாய் வேறு மாதிரி தெரியும்.



குழந்தைகளையும், கேமரா என்றால் கஞ்சி போட்டு விரைப்பாகும் மக்களையும,் சாதாரணமாக போட்டோ எடுக்க வேண்டும் என்றால் வெறுமனே ஃப்ளாஷை சில சமயம் அடித்து வைய்யுங்கள். அப்புறம் அவர்கள் சாதாரணமாவார்கள். அவர்கள் அசந்த நேரத்தில் நன்றாக இருக்கும் படத்தை எடுத்து வையுங்கள்.


" போட்டோ எடுக்கவேண்டும் .. சிரியுங்கள் " இந்த வாசகத்தை உங்கள் அகராதியில் இருந்து அழித்து விட்டு வாய்ப்புக்காக காத்திருந்து படம் எடுங்கள். படம் அற்புதமாக இருக்கும்.

அப்படியே உங்களுக்கு தெரிந்த டெக்னிக்ஸையும் இங்கே போட்டு வையுங்கள் .. மற்றவர்களுக்கு உதவும்.

கீழே உள்ள படத்தை க்ளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்

Thursday, July 26, 2007

நம்மூரு ஸ்டுடியோவுக்குள்ள போட்டோ எடுக்கப்போனா அங்கன ஒரு ஷ்டூல் இருக்கும். அதுல குந்த சொல்லுவார் அந்த போட்டொகிராபர். இங்க பாருங்க... கொஞ்சம்.. தலையை திருப்புங்க... ஒரு க்ளிக்..

நம்ம உம் முன்னு வச்சிருக்கிற மூஞ்சி அப்படியே வரும்... புகைப்படமா... அங்கன கீற 100 படங்களும் இதே மாதிரிதான் போரடிக்கிற மாதி இருக்கும். இன்னா மிஸ்டேக் நடக்குது நம்மளான்டை?... இக்கட சூடு நைனா..

வெள்ளக்காரன் தன்னோட ஸ்டுடியோல எப்படி புச்சிருக்கான்னு பாரு.. போர்ட்ராய்னா அந்த படத்துல ஒரு அழகு உணர்ச்சியிருக்கனும்... இயற்கை அழகு தெரியனும். மொத்தத்துல படம் நம்மகிட்ட பேசனும்!


Monday, July 23, 2007

நான் சொன்னேன் இவரது படங்களால் கவரப்பட்டேன் என்று.. ஆனால் எந்தப்படம் என்று சொல்லாததால் அனைவரும் அந்த பாராசூட் என்று நினைத்துவிட்டார்கள். உண்மையில் என் கலர் தாகமுள்ள கண்களுக்கு அந்த சருகு மற்றும் இலைகளின் நிறங்கள் ஒரு ஓவியம் போல் பட்டது. எனது குரு அடிக்கடி சொல்வார்... "சாதாரண மனிதர்களின் கண்ணுக்கு மிக மிக சாதாரணமாகத் தெரியும் ஒன்று ... ஒரு கலைஞனின் கண்ணுக்கு மிக மிக அழகாகத் தெரியும்... காரணம் ஒரு கலைஞனின் கண்கள் ஒரு பொருளில் உள்மறை அழகை ( லடென்ட் பியூட்டி) பார்க்கும் படி பழக்கப்பட்டிருக்கும்!" என்று. எவ்வளவு தீர்க்கமான வரிகள். நல்ல ரசிகனே நல்ல படைப்பாளியாக பரிணமிக்க முதல்படி!

பாண்டி ஆரோவில்லில் ஒரு Earthiness இருக்கும். நம்மூர் காஃபி டேயில் இல்லாத ஒரு அழகு அங்குள்ள கணேஷ் பேக்கரியில் இருக்கும். அது மாதிரி இந்த புகைப்படத்தின் வார்ம் கலர்களின் கலவையில் என் மனதைப் பறிகொடுத்தேன். அனைவரும் பச்சையிலும் நீலத்திலும் மனம் லயித்தபோது இந்த படம் எனக்கு ஒரு ஒளி ஓவியமாகப் பட்டது.

என்னடா ரீல் ... என்று சொல்லாதீர்கள். கீழே என் கண்ணில் பட்டதை இம்ப்ரொவைஸ் செய்திருக்கிறேன்.. க்ளிக் செய்து பெரிதாகப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் அது ஒரு ஒளி ஓவியமா இல்லையா என்று !



அன்புடன்
ஓசை செல்லா
என்னத்த சொல்ல... இவ்வளவு அழகான படங்கள் நம் வலைப்பதிவர்களால் எடுக்கப்பட்டு சர்வேசுவரனுக்கும் சீவீஆர் க்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன! இவர்களுக்கு ஒரு சில காரணங்களால் பரிசுகள் கிடைக்காமல் போயிருக்கலாம்.. ஆனால் அழகான சில படங்கள் சிறிது மாற்றப்பட்டிருந்தால் எப்படி நன்றாக வந்திருக்கும் என்று சர்வேசனும் சீவிஆர் ம் வார்த்தைகளால் சொல்லியிருக்கின்றனர். நான் இதோ படமாகவே காட்டியிருக்கின்றேன். இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று சம்பத்தப்பட்ட பதிவர்களே சொன்னால் நன்றாக இருக்கும்!

ஆனந்தின் படங்களும் வெற்றிபெற்றவர்களின் படங்களும் இதில் இல்லை! ஆனந்த், ஒப்பாரி மற்றும் திலகபாமாவின் படங்கள் என் பேவரைட்! ஏன் என்று பின் சொல்கிறேன்! மற்றவர்களும் பார்த்து இங்குள்ள படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து கருத்தை சொல்லுங்கள்.

குறிப்பு: இடதுபுறப்படத்தை சுட்டி பெரிதாக்கிப் பார்க்கவும்!

Friday, July 13, 2007




மேலே நீங்கள் பார்ப்பதெல்லாம் என் நண்பரின் இணயத்தளத்திற்காக நான் சுட்ட புகைப்படங்கள் ! ஆப்டிமைஸ் செய்யப்பட்டவை எனவே தெளிவு சிறிது குறைவாக இருக்கும்... ஆனால் லைட்டிங், ஃப்ரேமிங் போன்றவற்றை நீங்கள் கவனிக்கலாம்!

போன காமிரா பதிவை படிச்சுட்டு செல்லா நீங்க என்ன காமிராவில்எடுத்தீங்கன்னெல்லாம் கேட்காதீங்க. நம்ம கிட்ட ஒரு சாதாரண சின்ன ஒலிம்பஸ் SP - 500 uz டிஜிட்டல் காமிரா தான் இருக்கு! நீங்கள்ளாம் தூரிகையை விட ஓவியத்தை ரசிப்பவர்கள் என்ற தைரியத்தில் தான் நானும் கொஞ்சம் தயங்கிக் கொண்டே என் படங்களை இங்கே வெளியிடுகிறேன்!



முன் குறிப்பு :

இதைப் படித்த பிறகும் நீங்களே பலமுறை யோசியுங்கள். http://dpreview.com என்ற தளத்தில் எல்லா விதமான கேமராவிற்கும் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். நீங்கள் தேர்வு செய்யும் கேமராவை, அதுபோன்ற வேறு நிறுவனக் கேமராவுடன் ஒப்பீடு செய்து பாருங்கள்.


மூன்று வகையாக டிஜிடல் கேமராக்களை பிரிக்கலாம். point and shoot, semi SLR and SLR. உங்களுக்கு எது தேவை என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள்.

point and shoot கேமராக்களும் பலவகையில் வருகிறது. பாக்கெட்டில் போட்டு எடுத்துச் செல்லும் அளவிற்கு மிகச்சிறியதில்( அதிகம் features இருக்காது) இருந்து சற்றே தரமான பல features நிறைந்த கேமரா வரை. இந்த வகைக் கேமராக்கள் தாம் பலரிடம் பெரும்பாலும் உபயோகத்தில் இருப்பது. எனக்கு இந்த இடத்துக்கு போய் வந்தோம் என்று நினைவில் வைத்துக் கொள்ள ஒரு புகைப்படம் போதும். இன்னாருடன் இருந்தேன் என்று பெயரளவிற்கு ஆரம்பித்து சற்று உயர் தரமான புகைப்படம் வரையில் எடுக்க முடியும்.

இந்தவகை கேமராக்களில் Canon அல்லது Nikon கம்பெனி கேமராக்கள் என்னுடைய முதல் தேர்வு. செமி SLR வகைக் கேமராக்களும் உண்மையில் point and shoot கேமராக்களே. என்ன வித்தியாசம் என்றால் இதில் சற்று அதிக option கொடுத்திருப்பார்கள். கூடவே இமேஜிங் ப்ராஸஸர் நல்ல தரத்தில் வைத்திருப்பார்கள்.

இந்த வகைக் கேமராக்களை வாங்கும் போது முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியவை :


Zoom Capacity :

ஆரம்ப நிலைக் கேமராக்கள் பெரும்பாலும் 3x அளவில் தான் இருக்கும். 15x வரையிலும் கேமராக்கள் இருக்கின்றன. ஜூம் அதிகமாக இருப்பது நல்லது. இந்த வகையில் canon, panasonic மற்றும் சோனி நிறுவனத்தினர் அதிக அளவு ஜூம் உள்ள கேமராக்களை உற்பத்தி செய்கின்றார்கள்.

அதிக ஜூம் கொண்ட கேமராக்களுக்கான எடுத்துக் காட்டு - Canon S3-IS(12x Zoom), Canon S5-IS(12x Zoom), Sony DSC-h7(15x Zoom) Panasonic - FZ50 (12X Zoom )

நிக்கான் நிறுவனமும் ஜூம் கொண்ட கேமராக்களைத் தயாரிக்கிறார்கள். ஆனால் இதுவரை அவை 10x உட்பட்டே இருந்திருக்கிறது.

எங்களுடைய தேர்வு - Canon S5-IS(12x Zoom) அல்லது Panasonic - FZ50 (12X Zoom ).

அடுத்து லென்ஸ் .. விரைவில்

அன்புடன்
ஜீவ்ஸ் & செல்லா
மேலே ஓட்டுப் பெட்டி உள்ளது.. தங்களிடம் என்ன மாதிரியான காமிரா உள்ளதுஎன்று ஓட்டளித்துச் செல்லவும்!

Sunday, July 8, 2007

எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா.. என்று ரஜினி பாடுவார் ஒரு படத்தில்... நான்கே ஃப்ரேமில் கவித்துவமாகவும் தத்துவமாகவும் மனித வாழ்க்கையை ஒரு புகைப்படக் கலைஞன் இங்கே கொடுத்துள்ளான் சிறிது க்ராபிக்ஸும் கலந்து.

கண்ணால் பார்ப்பதைஎடுப்பது புகைப்படக் கலை என்று சொன்னது போய் மனதால் பார்ப்பதை கண்களுக்கு கடத்தும் கலை விசுவல் கம்யூனிகேசன். ஒரு நான்கு நிழற்படங்களின் சங்கமத்தில் உருவான வாழ்க்கை என்னும் புகைப்படக் கலவை ! இது சில்ஹவுட்எஃபெக்ட் எனப்படும் புகைப்பட உத்தியை கிராஃபிக்சில் கலந்து வார்த்தெடுத்தது ஆகும். நிறங்களும் ஒவ்வொரு படத்துக்கும் மாறுவதைக் காண்க.

இதோ அந்தப் படக் கலவை... க்ளிக்கிப் பெரிதாக்கி ரசியுங்கள்



அன்புடன்
ஓசை செல்லா

Saturday, July 7, 2007

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பது மிகையில்லை என்று சொல்லுமளவிற்கு அந்த படம் அமெரிக்க மக்களின் இதயத்தை தைத்தது. தங்களது அரசு செய்யும் கொடூரத்தை அதுவரை பாராமுகமாக இருந்த அமெரிக்க பொதுமக்கள் இந்த படத்தை செய்தித்தாள்களில் பார்த்தவுடன் கொந்தளித்தனர். வியட்னாம் போருக்கெதிராக பாடகர்களும், அறிஞர்களும் பொதுமக்களும் திரண்டனர். இதைஎதிர்கொள்ள இயலாமல் கடைசியில் அமெரிக்க அரசாங்கமும் பணிந்தது. இதோ அந்த புகைப்படம். அந்த படம் .... நேபாம் எனும் உடலில் பற்றிஎறியும் ரசாயனக் குண்டுகளை ஒரு கிராமத்தில் வீசியபோது ஒரு சிறுமி தீயிடமிருந்து தப்பிக்க தனது ஆடைகளைத் துறந்து உயிர்பிழைக்க ஓடிவருவதை அசோசியேட்டட் பிரஸ்' ஐ சேர்ந்த நிக் உட்என்ற புகைப்படக் கலைஞன் தனது காமிராவில் பிடித்தது.
அந்த சரித்திரப் புகழ் பெற்ற படம் கீழே



இந்தப் பெண் பிற்காலத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து போரின் கொடுமைகளைஎடுத்துச் சொல்லும் ஒரு ஐக்கிய நாட்டு அமைதித்தூதுவர் ஆனார்!

முழுச் செய்திக்கு இங்கே சுட்டவும்


அன்புடன்
ஓசை செல்லா

Friday, July 6, 2007

அன்பார்ந்த புகைப்படக் கலை மாணவர்களுக்கு ஓசை செல்லாவின் அன்பு வணக்கங்கள். இன்று முதல் பாடங்கள் ஆரம்பம்! உங்களிடம் எந்த வகையான காமிரா இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்து படம் எடுத்து அனுப்புங்கள். இது தியரி மட்டுமல்ல.... நீங்களும் ப்ராக்டிகலாகச் செய்து சுட்டி தரவேண்டிய விடயம். இன்று நான் உங்களுக்கு காமிராவைப் பிடிப்பது பற்றிய சில பாடங்கள்!

நம்மில் பெரும்பாலோர் ஷேக் இல்லாமல் ப்டம்பிடிகவேண்டும் என்று நினைத்தாலும் காமிராவைச் சரியாகப் பிடிக்கத் தெரியாமல் க்ளிக் கி பல நல்ல படங்களை வீணடித்திருப்போம். இப்பொழுது முதலில் ஒரு காமிராவை எப்படிப் பிடிப்பது என்று பார்ப்போம்.


முதல் விதி... காமிராவை இடதுகையால் மட்டுமே தாங்கிப்பிடிக்கவேண்டும் ( நீங்கள் வலது கைப்பழக்கம் உடையவராயிருந்தால்! ). பின்பு எவ்வாறெல்லாம் பிடிக்கலாம்என்பதை பாடமாக அறுக்காமல் படமாகப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!



இது செங்குத்தாக ( Vertical Holding Position) பிடிக்கும் முறை. இங்கும் காமிரா இடது கையாலேயே தாங்கப்படுவதைக் கவனியுங்கள்.



உங்களிடம் போக்கஸ், மற்றும் அப்பர்சர் போன்ற கண்ட்ரோல்களைக் கையாள இடது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் உபயோகப்படுவதை பாருங்கள்.



முன்புறத் தோற்றம். வலது கை க்ளிக்க மற்றும் ஆடாமல் பிடிக்க மட்டுமே. காமிராவின் முழுஎடையும் இடதுகையாளேயே தாங்கப்படவேண்டும்.

சரி பாடம் முடிந்தாகிவிட்டது... உங்கள் டிஜிட்டலில் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் காமிராவைப் பிடித்து உங்கள் படங்களை சுட்டுத்தள்ளி உங்கள் பதிவில் போட்டு இங்ஙே சுட்டி கொடுங்கள்! வாழ்த்துக்கள்!

பிகு:
நீங்கள் இந்த மாதிரி சரியாகப் பிடித்தாலே நீங்கள் ஒரு நிபுணர் என்று மற்றவர்கள் நினைப்பார்கள்! காமிரா எதாக இருந்தாலும்!

Monday, July 2, 2007



சென்றவாரம்எனது நண்பர் ரமேஷ் அவர்கள் தனது புதிய டீ தயாரிப்பு நிறுவனத்தின் புதிய இணையதளம் ஒன்றை நான் கலைக்கண்ணோட்டத்தோடு ரி டிசைன் செய்து தர இயலுமா என்று கேட்டார். மிகவும் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு என்று தெரிந்ததால் "சரி 2 நாட்களில் வருகிறேன்" என்று சொன்னேன். அவரின் அலுவலகம் அடைந்த போது அவர் சவுதி அரேபியா சென்றுள்ளதாகச் சொன்னார்கள். சரி திரும்பலாம் என்றுஎழுந்த போது அந்த பேக்ரவுண்ட் என் கண்களைச் சுண்டியிழுத்தது! உடனே ஒரு கப் டீ மற்றும் சில பாக்கெட்டுகளை அவ்விடத்திலே வைக்கச்சொன்னேன்.என்னிடமோ எப்பொழுதும் ஒரு டிஜிட்டல் காமிரா மற்றும் ட்ரைபோடு காரின் பின் சீட்டில் கிடக்கும். (ஆனால் ஃபிளாஸ் மட்டும் நஹீ! ) . ஒரு 15 நிமிடத்தில்எடுத்து முடித்த புகைப்படங்கள்! இயற்கை ஒளியில் சிறிது விளையாடி...எந்த முன் திட்டமிடுதலும் இன்றி !



அவர்கள்ஏற்கனவே சென்னையிலிருந்து வந்த குழு மூலம் விளம்பரப் படம்எடுத்து முடித்திருந்தாலும் என் படங்கள் அவரைக் கவர்ந்ததாக வெளிநாட்டுப் பயணம் முடிந்து வந்ததும் செல் பேசினார். மிகவும் சந்தோஷமாக இருந்தது! இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு நல்ல புகைப்படம்எடுக்க மிகவும் அத்தியாவசியமானது நமது கலைக்கண் என்பதே!
"Great Photographs are not taken by the best cameras but invariably by a golden eye"என்றுஎன் புகைப்படக் கலை குரு அடிக்கடி சொல்வார்!

எனவே நாளை முதல் உங்கள் கண்களையும் சிறிது கூர்தீட்டிக்கொள்ளுங்கள்!

அன்புடன்
ஓசை செல்லா

பிகு:சரி ஒரு சிறிய கேள்வி. மேலே நீங்கள் பார்த்த படங்களின் பின்புலம் (Back Graound) எதனால் செய்யப்பட்டது!




இது அவரின் அலுவலகப் படிக்கட்டுகள்.

animated images

Saturday, June 30, 2007





பதினாறு வயதில் நான் காந்திகிராமட்தில் படித்துக் கொண்டிருந்த போது நண்பன் சௌந்தர் ஒரு ஆக்ஃபா க்ளிக் 3 காமிராவைக் கையில் கொடுத்தான். அன்றுதான் ஒரு காமிராவை முதன் முதலாகத் தொட்டது. எங்கெங்கோ காசு சேத்தி ஒரு 120 பிலிம் ரோல் ( சிவப்புக்கலர் காகிதத்தில் நூல் கண்டு மாதிரி பிலிமை சுத்தியிருப்பார்கள்!) போட்டு 12 கருப்பு வெள்ளை படங்களை சுட்டுத்தள்ளினேன். அன்று ஆரம்பித்த பந்தம் இன்றும் தொடர்கிறது.. டிஜிட்டல் ருபத்தில்! சரி பாடத்திற்கு வருவோம். நான் பார்த்த பல்வேறு வகையான காமிராக்களைப்பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

POINT AND SHOOT CAMERA

இவை தற்பொழுதும் கடைகளில் கிடைக்கிறது. கொடாக் KB 10 போன்றவைகளெல்லாம் இந்த வகையினதே. விலை 400 ரூபாய் முதல் ஆயிரம் வரை. இவைகள் இன்று பொம்மைகள்!

AUTO FOCUS FILM CAMERA

இவைகளும் தற்பொழுது அருகி வருகின்றன. இவகளின் மூலம் ஓரளவு ப்டங்கள் எடுக்கமுடியும். OLYMPUS mu மாடெல்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

RANGE FINDER CAMERA

பலரும் இதன்மூலம் புகைப்படக் கலையை பாலபாடமாகக் கற்றிருப்பார்கள். எலெக்ட்ரோ35 காமிரா மிகச்சிறந்த உதாரணம். இவற்றில் சில காமிராக்கள் 2000 முதல் 50,000 வரை விற்கப்பட்டன.

LARGE FORMAT CAMERA


இவை பெரிய அளவு நெகடிவ்கள் மூலம் படங்கள் எடுக்க உதவுபவை. இவற்றில் எடுக்கப்படும் படங்கள் BLOW UP போன்ற பெரிய படங்கள் ஆகும். சினார், ஹார்ஷ்மேன் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.

ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து காமிராக்களையும் விட புகைப்படக் கலை கற்க விரும்புபவர்கள் அவசியம் வாங்க வேண்டியது SLR எனப்படும் SINGLE LENSE REFLEX CAMERA! இவ்வகை காமிராக்கள் பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்!

Friday, June 22, 2007


புகைப்படம் எடுக்க மிகவும் அவசியமான ஒன்று ஒளி பற்றிய அறிவு. மிகவும் ஆழமாகப் படிக்க விரும்புபவர்கள் ஒவ்வொரு நிறத்தின் வெப்பத்தைப் பற்றியெல்லாம் (Kelvin) படிக்க வேண்டும். நாமக்கு அதெல்லாம் இப்பொழுது தேவை இல்லை.

என்னைப் பொருத்தவரை இயற்கை ஒளியை உபயோகித்து படம்எடுப்பதே எனக்கு கைவந்த கலை. இதுவரை ஒரு உருப்படியான ஃபளாஷ் லைட்டைக்கூட நான் உபயோகித்தது இல்லை! ஆனால் லைட்டிங் மீது எனக்கு ஒரு தனிக்காதலே உண்டு. மேலே உள்ள படம் நன்றாக உள்ளதா?

இது மிகவும்எளிதாகஎடுக்கக்கூடிய படம்தான். உங்கள் இளம்மனிதரை ஒரு திரையிட்ட சன்னலின் வழியாக வரும் ஒளி.. அவரது ஒரு பக்கம் மட்டும் விழுமாறு நிற்கவைக்கவும். பாதி சன்னல் மட்டுமே திரையால் மறைக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் இந்த மென்மையானஎஃபெக்ட்டை பெறமுடியும். முடிந்தவரை நான் முதல் பதிவிலே சொல்லிய மாதிரி கம்போசிங்கில் கவனமாக இருக்கவும். முடிந்தவரை இந்த மாதிரி ப்டங்களுக்கு க்ளோசப்பாக செல்லவேண்டும். ( பலரும் அவ்வாறு செய்வது இல்லை!). இதே படத்தை ஃப்ளாஷ் உபயோகித்து எடுத்திருந்தால் இந்த ஒளியின் , நிழலின் அழகு தெரிந்திருக்காது. படத்தின் ஒரு பகுதி வெளிச்சமாகவும் மறுபகுதி நிழல்களோடும் சேர்ந்து இந்த அழகைக் கொடுக்கிறது எனலாம்.



மேலும் இந்த மாதிரி படத்தைஎடுக்க உங்கள் செல்பேசி காமிரா மிகவும் உதவும்!..எடுத்துத்தான் பாருங்களேன்! சிறுவர்கள் தான்என்றில்லை... உங்கள் காதலியை/காதலனை/மனைவியை/கணவனை' க் கூட க்ளிக்கி அசத்தலாமே!

Thursday, June 21, 2007

பதிவுலக நண்பர் திரு ஐயப்பன் அவர்களிடம் நான் அடிக்கடி பேசுவது உண்டு. (மிகவும் சரக்குள்ள, சமுதாயத்திற்கு உதவும் எண்ணம் உள்ள அடக்கமான ந(ண்)பர்!). அவரும் இன்னும் சில பதிவர்களும் சேர்ந்து ஒரு புகைப்படக் கலை பற்றிய வலைப்பூ ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம். முதலில் சில பேசிக் விசயங்கள் பற்றிய சில பதிவுகளை இங்கேயே தரலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவுத் தொடர்.



மேலே உள்ள படத்தை பாருங்கள். ஒரு சாதாரண தினக் காட்சி.என் வீட்டுக்கு அருகில் காலை பள்ளி செல்லும் இளம் மனிதர்களைஏற்றிச் செல்ல தினம் வரும் ஒரு ஆட்டோ. பூத்துக் குழுங்கும் ஒரு அழகிய மரம்.எடுத்தேன் காமிராவை. சுட்டேன் உடனே. .. இதோ ஒரு அழகிய படம்.

இதில் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?... ஆம் கம்போசிசன் எனப்படும் விசயம். அதாவது நமது படத்தின்எல்லைகள்எது என்று வியூ ஃபைன்டரால் பார்த்து நாம் முடிவு செய்யும் மென்கலை நுட்பம். இதை மனிதர்களாகிய நாம் தான் செய்ய வேண்டும் ...எவ்வளவு காஸ்ட்லியான காமிராவாக இருந்தாலும்! மேலே உள்ள படத்தில் ஆட்டோ இடமிருந்து வலமாக நிற்கிறது தானே.எனவே கம்போஸ் செய்யும்பொழுது வலது பக்கம் அதிக இடம் விட்டுஎடுக்கப் பட்டதால் அழகாக தெரிகிறது... நீங்களும் உங்கள் காரையோ, பைக்கையோ இதே மாதிரி எடுத்து பருங்கள்... அழகாக இருக்கும். ( செல்பேசியில் உள்ள காமிராவே போதும்... கம்போசிங் பழக!)

(பிகு) படத்தின் மீது க்ளிக்கி பெரிதாகப் பார்க்கவும்.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff