Monday, February 17, 2014

“பெங்களூர், உங்கள் பார்வையில்..”- AID நடத்தும் ஒளிப்படப் போட்டி

3 comments:
 
AID (Association for India's Development) ஒரு இலாப நோக்கற்ற, தன்னார்வ நிறுவனம். பாராபட்சமற்ற நடுநிலையான, நியாயமான சமுதாயத்தை உருவாக்கவும், சமுதாயத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காவும் பாடுபட்டு வருகிறது. கல்வி,வாழ்வாதாரம், ஆரோக்கியம், பெண்கள் உரிமை, இயற்கை வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் AID, பெங்களூரில் பரவலாக மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டியை அறிவித்துள்ளது. அத்தோடு நிதி திரட்டி இது போன்ற சேவைகளுக்கு ஊக்கம் தரும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.


*
SOUL - SPACE - SOCIETY
BANGALORE AS YOU SEE IT
[ஆன்மா - வெளி - சமூகம்
பெங்களூர், உங்கள் பார்வையில்..]
இதுதான் தலைப்பு.

*இதற்கென உருவாக்கப்பட்டுள்ள Face Book பக்கத்தில் படங்களை வலையேற்ற வேண்டும்: https://www.facebook.com/AIDIndiaBangalore?sk=app_292725327421649 [படம் ஏற்றுவதில் error message வருமாயின் வேறொரு browser உபயோகித்துப் பார்க்கவும்.]

அங்கேயே விதிமுறைகளும் தரப்பட்டிருந்தாலும் தமிழில் இங்கும்:

*ஒருவருக்கு 5 படங்கள் வரை அனுமதி.

*இரண்டே பரிசுகள்தாம். முதல் பரிசு ரூ 10000/- இரண்டாம் பரிசு ரூ 5000/-

*முதல் பத்தியில் குறிப்பிட்டிருந்த “கல்வி, வாழ்வாதாரம், ஆரோக்கியம், பெண்கள் உரிமை, இயற்கை வளம்” ஆகிய தலைப்புகளின் கீழ் படம் பொருந்தி வர வேண்டும்.

*வாக்குகள் அளிக்கும் முறை ஊக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருப்பினும் அது பரிசீலனையின் ஒரு பகுதியாகவே இருக்கும். வாக்களிப்பு முறையால் படங்கள் இன்னும் பலரைச் சென்றடைந்து விழிப்புணர்வுக்கும் உதவுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மற்றபடி நடுவர் குழுவே கண்காட்சிக்கான படங்களைத் தேர்வு செய்வர். அதிலிருந்து முதல் பரிசுக்கான படங்களை போட்டி அமைப்பாளர் நியமிக்கும் சிறப்பு நடுவர் தேர்வு செய்வார்.

*படம் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். டெக்னிக்கலாக சிறப்பாக இருக்கிறதா என்பதை விடவும் கருவினை எந்த அளவுக்குப் படம் வெளிக்கொண்டு வருகிறது என்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.

* எப்போதுமே போட்டிக்கு சமர்ப்பிக்கும் படங்களில் வாட்டர் மார்க் இருக்கக் கூடாது, என்பது பொதுவான விதி. நினைவிருக்கட்டும்.

*பெங்களூரைச் சேர்ந்த எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம்.

*பெங்களூர்வாசிகளாக அல்லாத பட்சத்தில் பெங்களூர் வந்தபோது எடுத்த படங்களைக் கொடுக்கலாம். நம்பிக்கையின் பேரில் நடத்தப்படும் இப்போட்டி விதிகளுக்குக் கட்டுப்பட்டு படங்கள் கண்டிப்பாக பெங்களூரில் எடுத்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

*பரிசுக்குரிய படங்கள் போக தேர்வாகும் படங்கள் ‘தளம்’ அரங்கில் மார்ச் 8,9 தேதிகளில் காட்சிப் படுத்தப்படும். அதற்கான சட்டமிடும் செலவான ரூ.500_யை ஒளிப்படக் கலைஞர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

*படங்களை வலையேற்றக் கடைசித் தேதி: 24 பிப்ரவரி 2014, நள்ளிரவு 12 மணி.

பரிசு மட்டுமே நோக்கமாக இன்றி சமுதாய விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் தரும் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பால் போட்டியையும், கண்காட்சியையும் சிறப்பியுங்கள்.

**

இந்தப் போட்டிக்கான கடைசித் தேதி 1 மார்ச் 2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது:


மார்ச் 8,9 தேதிகளில் நடைபெறவிருந்த ஒளிப்படக் கண்காட்சியும் 15,16 தேதிகளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
***

3 comments:

  1. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  3. உங்களுக்கும் கலந்து கொள்ளப் போகும் மற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff