Monday, October 3, 2011

ஒளிச் சிதறல்.. ஒரு புரிதல்..- Knowing Light - கார முந்திரி V

1 comment:
 
பொருள் மேலே ஒளி பட்டுத் திருப்பி அனுப்பப் படறதுதான் ரிஃப்லெக்ஷன்-ன்னு பார்த்தோம். அதுக்கு மாதிரி படம் எங்கே? ஹிஹிஹி.. நாம பார்க்கிற எல்லா படங்களுமே இதுக்கு மாதிரி படங்கள்தான். இப்படி ஒளி சிதறி திருப்பி அனுப்பப்பட்டு நம் கண்களை அடையாட்டா நாம் அதைப் பார்க்கவே முடியாது. ஆக ரிஃப்லெக்ஷன் என்கிறது தினசரி எப்போதுமே நடந்துகிட்டு இருக்கிற விஷயம். ஆகவே படம் எடுக்க இது வெகுவாகவே பார்க்கப்பட வேண்டிய விஷயமும் கூட.

இது வரை ஒளி, அதன் நடத்தை ஆகியவற்றைப் பார்த்தோம். ஒளி மூலத்தின் மூன்று முக்கிய தன்மைகள் பிரகாசம், நிறம், மாறுபாடு என்று பார்த்தோம். படமெடுப்பதில் லைட்டிங் என்பதற்கு படம் எடுக்கப்படும் பொருளே வெளிச்சத்தை விட முக்கிய காரணி என்றும் பார்த்தோம். இந்த படம் எடுக்கப்படும் பொருள் ஒளியை ஊடுருவ விடலாம், உள் வாங்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம் என்பதையும் பார்த்தோம். இனி மேலே இந்தக் கடைசி விஷயத்தை மேலும் கவனிக்கலாம்.

பொருள் ஒளி முழுவதையும் ஊடுருவ விட்டால் அதை பார்க்க முடியாது. அதே போல முழுக்க உள்வாங்கி விட்டாலும் பார்க்க முடியாது. இந்த இரண்டிலுமே ஒளி பொருள் மேலே பட்டு சிதறி நம் கண்களை வந்து அடையவில்லை. நல்ல காலமா இயற்கையில இந்த இரண்டு எக்ஸ்ட்ரீம்களிலும் விஷயங்கள் 100% ஆக இல்லை. பெரும்பாலும் கொஞ்சமாவது ஒளி சிதறி பொருளை நாம் பார்க்க முடிகிறது. ஆகவே இந்த ஒளிச் சிதறலை சரியாக புரிந்து கொள்வதும் மேலாளுவதுமே போட்டோகிராபில லைட்டிங் என்பதில் முக்கியமானது.

ஒரு எண்ணச் சோதனை மூலம் இதைச் சரியாக புரிஞ்சு கொள்ள முயற்சி செய்யலாம்.

ஒரு மேசை மேலே ஒரு தடிமனான வழ வழன்னு இருக்கிற சாம்பல் நிற காகிதத்தை கற்பனை செய்யுங்க. சாம்பல்(க்ரே)ன்னா இது மேலே பென்சில்ல எழுதினா தெரியணும். அதே சமயம் யாரும் அதை வெள்ளைன்னு நினைக்ககூடாது. சரியா?

உதாரணத்துக்கு இப்படி:


அதே போல ஒரு சாம்பல் நிறத் தகடு கற்பனைக்கு கொண்டு வாங்க. பேப்பர் அளவே அதுவும். அதே நிறம் வழ வழப்பு.

இப்படி இருக்கலாம்:


ரைட், அதே மாதிரி அளவு, நிறம், வழவழப்போட ஒரு செராமிக் டைல்-உம் கற்பனைக்கு வரட்டும்.

இப்படி:


இது மூணையும் (கற்பனை செய்து) பார்த்தா, ஒவ்வொண்ணும் ஏன் வித்தியாசமா இருக்கு? இதுல எதுவும் ஒளியை ஊடுருவ விடலை. (அதுக்குத்தான் காகிதம் தடிமனான்னு சொன்னோம்!). எல்லாமே ஒரே அளவு ஒளியை உள்வாங்கியது. அதனாலதான் எல்லாமே ஒரே நிறமா இருக்கு! சரிதானே? அப்ப இந்த மூன்றுமே ஒளியை வித்தியாசமா திருப்பி அனுப்புகின்றன. இது கற்பனையிலேயே எப்படித் தெரிஞ்சது? நாம் இந்த பதிவுகளில பார்க்கபோகிற எல்லாமே ஏற்கெனவே நம்ம தினசரி வாழ்க்கையில பார்த்தவைதான். அவற்றை இங்கே கவனத்துக்கு கொண்டு வரோம். அவ்வளோதான்.

(இன்னும் தெரிந்து கொள்வோம்)

காரமுந்திரி I.
காரமுந்திரி II

1 comment:

  1. எளிமையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff