Wednesday, December 3, 2014

மனிதர்களைப் படம் பிடித்தல் - என் புகைப் பட அனுபவங்கள் (24 - நிறைவுப் பகுதி)

4 comments:
 

யது வந்த மனிதர்களைப் படம் பிடித்தல் எனக்குப் பிடிக்காத ஒன்று.  காரணங்கள் பல.  அவற்றுள் சில:

1.        நீங்கள் கஷ்டப் பட்டு படம் எடுத்து அவரிடம் பெருமையாக் காட்டுவீர்கள்.  அவர் உடனே, "ஐயே.... இது நல்லாவே இல்லியே.  என்னெயெப் போலவே இல்லியே.  மூஞ்சி ஏன் கோணலாத் தெரியுது?  ஒங்க கேமிரா லென்சுலெ எதுனா கோளாறா?  கருப்பா இருக்கே?"  என்பார்கள்.  (அவர்கள் கண்ணாடியில் முகத்தினைப் பார்த்திருக்கவே மாட்டார்களோ!)

2.       பல பெரியவர்கள் எப்போதும் படம் பிடிக்கும் போது விறைப்பாக நின்று கொண்டு முகத்தில் சிறிதும் சிரிப்பின்றி (என்னைப் போல) வைத்துக் கொள்வார்கள்.  கேமிராவை நேராகப் பார்ப்பார்கள்.  ஒருவரது முகத்தின் அழகும், குணமும் அவர் சிறிது பக்க வாட்டில் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் நன்றாகத் தெரியும்.  பெரியவர்கள் அவர்களது தலையை நீங்கள் சற்று திருப்பினாலும் அவர் கண்கள் கேமிராவையும், உங்களையுமே பார்த்துக் கொண்டிருக்கும்.

குழந்தைகளைப் படம் பிடிப்பது அப்படி அல்ல.  குழந்தைகள் இயல்பாக இருப்பார்கள்.  அவர்களுக்குதான் சூது வாது தெரியாதே.  கள்ளங்கபட மற்ற அவர்கள் முகம் எப்போதுமே அழகாக இருக்கும்.  எடுத்த படத்தைப் பார்த்துக் குறையும் சொல்ல மாட்டார்கள்.  வயதான பின்பும் தங்கள் குழந்தைப் பருவப் படங்களைப் பார்க்கும் போது அவர்கள் சந்தோஷப் படுவார்களேயொழிய குற்றம் கண்டு பிடிக்க மாட்டார்கள்.

ஒரு முறை எனது அண்ணன் மகள் ஒருத்தி தன்னைப் படம் பிடிக்கச் சொல்லிக் கேட்டாள்.  அருகில் இருந்த என் அண்ணன் கத்தினான், "அவனுக்கு மனுஷாளெப் படம் பிடிக்கத் தெரியாதுடீ.  கோட்டானையும், குரங்கையுந்தான் படம் எடுப்பான்" என்று. இருந்தாலும் எனக்குத் தோன்றும் சில விஷயங்களைச் சொல்லுகின்றேன் பெரியவர்களையும், குழந்தைகளையும் படம் பிடிப்பது பற்றி.

பெரியவர்களைப் படம் பிடித்தல் பற்றி முதலில் பார்ப்போம்:

1.       அவர்களை நிற்க வைத்து, "சிரிங்க" என்று சொல்லாமல் அவர்களோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவர்கள் இயல்பாக இருக்கும் போது 'ஷட்டரை' அழுத்துங்கள்.

2.       அவர்கள் முன்பிருந்து பலமான சூரிய வெளிச்சமோ, விளக்கு வெளிச்சமோ விழுந்திடும் போது (Harsh lighting) படம் பிடிக்காதீர்கள்.  போட்டோ பிடிக்கும் கடைகளில் பார்த்திருப்பீர்கள் வெள்ளைக் குடைகளில் பிளாஷ் வெளிச்சம் விழுந்து அதிலிருந்து சிதறும் ஒளி உங்கள் முகத்தில் விழுமாறு வைத்திருக்கும் அமைப்புகளை.  மிருதுவான வெளிச்சம் என்பார்கள் அதை (Soft lighting).  அம்மாதிரி அமைப்புகள் இரண்டிருக்கும்.  அவற்றில் அதிக வெளிச்சம் தரும் அமைப்பு (Main light) உங்கள் முகத்தை விட சற்று உயரத்தில், பக்க வாட்டில் இருந்து விழுமாறும், குறைந்த வெளிச்சம் தரும் அமைப்பு (fill in light) முகத்தின் முன் புறம் இருக்குமாறும் அமைக்கப் பட்டிருக்கும்.

3.       மரக் கிளைகள் வழியே திட்டுத் திட்டாக அவர்கள் மூஞ்சியில் சூரிய வெளிச்சம் விழுந்திடும் போது படம் பிடிக்காதீர்கள்.  அப்படி எடுக்கும் படங்கள் அவரை வெண் குஷ்ட ரோகியாகிக் காட்டும்.

4.       யாரைப் படம் பிடிக்கிறீர்களோ அவர்கள் பின்புறமிருந்து பலமான சூரிய ஒளியோ, வானமோ, வெளியில் இருந்து ஜன்னல் வழியே வந்திடும் வெளிச்சமோ வரும் போது (Back lighting) உங்கள் காமிராவை தானியங்கியாக வெளிச்சத்தினை அளந்து இயக்கும் வித்த்தில் வைத்து எடுக்காதீர்கள்.  அப்படி எடுக்கும்போது அவர் கருப்பாகத் தெரிவார்.  காரணம் உங்கள் கேமிரா அதன் லென்சின் மீது விழுந்திடும் வெளிச்சத்தினை அளந்து அதற்கேற்றார்ப்போல் 'ஷட்டர்' ஸ்பீடையோ, 'அபெர்சரை'யோ வைக்கிறது.  அதனால் அவர் முகம் கருப்பாகத் தெரியும்.  அம்மாதிரி எடுக்க வேண்டி வந்தால் 'பிளாஷை' உபயோகித்து எடுங்கள்.

5.       ஒருவரின் இடுப்புக்கு மேலான படத்தை எடுத்து, அவரது உணர்ச்சிகளைக் காட்ட விரும்புகிறீர்கள் என்றால் அவரை கேமிராவை நேராகப் பார்க்கச் செய்யாதீர்கள்.  நேராக எடுக்கப் படும் படங்களை விட சற்றே பக்க வாட்டில் இருந்து எடுக்கப் படும் படங்கள் அழகாக இருக்கும்.  ஒருவரது கண்கள் தான் அவர் உடலில் உணர்வுகளை வெளிப் படுத்திடும் மிக முக்கிய உறுப்பு.  ஆகவே அந்தக் கண்ணோ, கண்களோ நான் முன்பு ஒரு கட்டுரையில் சொல்லி இருந்த ஒரு படத்தின் முக்கியப் புள்ளிகள் நான்கில் ஒன்றின் (picture's focal points) அருகே வருமாறு படம் எடுங்கள்.  அப்படி எடுக்கும் போது ஒன்றை மறந்து விடாதீர்கள்.  அவர் கண் / கண்கள் பார்த்திட இடமளியுங்கள்.
                 



முக்கியப் புள்ளிகள் (Focal points)



உலகப் புகழ் வாய்ந்த 'கார்ஷ் ஒஃப் ஒட்டவா', ஓ.பி.ஷர்மா மற்றும் அவர்கள் போன்ற பலர் எடுத்த படங்களைக் கூர்ந்து நோக்குங்கள்.  அவர்கள் எழுதியவற்றையோ, அவர்கள்சிப் பற்றிப் பிறர் எழுதிய வற்றையோ படியுங்கள்.

பெரியவர்களை விடுங்கள்.  

குழந்தைகளைப் படம் பிடிப்பதைப்  பார்ப்போம்:

குழந்தைகள் ஒரு இடத்தில் நின்று உங்களுக்காக 'போஸ்கொடுக்க மாட்டார்கள்.  ஒரு கணம் ஓரிடத்தில் நில்லாது ஓடிக் கொண்டே இருப்பார்கள்.  நீங்கள்தான் அவர்கள் பின்னே ஓடிக் கொண்டிருக்க வேண்டும் அவ்வப்போது அவர்களின் சேட்டைகளைப் படம் பிடிக்க.  அவ்வாறு எடுக்கும் படங்கள் தான் அழகாக அமையும்.  உதாரணத்திற்கு சில படங்கள் கீழே:



(ஒன்னுது இல்லடா.....குட்றா........)




(தின்ன சோறு ஒடம்புலெ ஒட்ட வாணாம்?)



(ஆராரோ...ஆரிரரோ...ஆரடிச்சா? நீ அழறே?)



(ஆசை முத்தம் தா...தா...)

(யாரு அங்கெ வர்றது?)


(எனக்குத் தூக்கமா வருதுங்க)

உங்களுக்கும் தூக்கமா வருதில்லெ?  அப்பொ இத்தோடெ முடிச்சுக்கறேன் என் கட்டுரைகளெ.  வணக்கம்!

(முதல் படம் தவிர மற்ற அனைத்தும் எடுத்தது நடராஜன் கல்பட்டு)
***

இத்துடன் இத்தொடர் நிறைவுறுகிறது. PiT வாசகர்களுடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட திரு. கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு நம் நன்றி!

-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
தினகரன் வசந்தத்தில் திரு. நடராஜன் கல்பட்டு

4 comments:

  1. nandri, ennal padangalai paarkka mudiavillai. "Access forbidden"

    ReplyDelete
  2. சில browser-களில் படம் திறக்காமல் இருந்ததை நீங்கள் சொன்னதும் கவனித்து, இப்போது சரி செய்துள்ளோம். நன்றி.

    ReplyDelete
  3. ஹைய்யோ!!!!

    ஒவ்வொரு படமும் அழகோ அழகு!

    குழந்தைகள் போலத்தான் பூனைகளும். இயல்பான அழகு எப்போதும் முகத்தில்:-)

    ReplyDelete
  4. அருமையான பாடம்.....

    படங்கள் ஒவ்வொன்றும் அழகு!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff