பொதுவாகவே கட்டிடங்களைப் புகைப்படமெடுப்பதென்பது இலகுவாகத் தோன்றினாலும், சவால் நிறைந்த ஒன்று தான் அதுவும் புதிய நிழற்படக்காரர்களுக்கு. துறை சார்ந்த நிபுணர்களும் இதை ஒத்துக் கொள்வார்கள். இந்த வகை புகைப் படங்களுக்கு வரவேற்பும் அதிகம் என்பது முக்கியமான ஒன்று. ஆனால் முடியாததென்று எதுவும் இல்லை அல்லவா
Architecture / கட்டமைப்பு நிழற்படங்களுக்கு முக்கியமான இடையூறாக இருப்பது கோடுகள். எந்தப் பெரிய அல்லது சிறிய கட்டிடமாக இருக்கட்டுமே அதில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் இருக்கும். ( Remember leading line concept ). இந்தக் கோடுகள் கவனத்தைச் சிதறடிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். இது பெரும்பாலும் தவறான கோணத்தில் எடுக்கும் போது புகைப் படத்தின் அழகையே கெடுத்து குட்டிச் சுவராக்கி விடும். ஆனால் அதுவே சற்று யோசித்து சரியான கோணத்தில் எடுத்தால் அற்புதமான அழகைத் தரும். உதாரணத்துக்கு சொல்லனும்னா, கட்டிடத்தின் அருகே நின்று வெகு நேராக எடுக்கும் புகைப்படத்திற்கும் , அதையே பக்க வாட்டிலோ அல்லது சற்று வித்தியாசக் கோணத்திலோ எடுத்தால் வரும் படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரியும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh2SDeP8IuQaYanjfgy1mR5gSlJE1TTI9HfctRbbwnkyLX3YQ-wH5a7YnUta0M7HloUdwbAsnEV5_gmYeq_GIzRfeeNRZ5bsQFoSejWu13D3QI4j1BLNZbm3AyrBvLDR6A5QR78QMG8eIC/s400/ver+1_-0_-1_tonemapped.jpg)
பண்ணை வீடுகளையோ அல்லது தனித்திருக்கும் வீடுகளையோ அல்லது பழைய காலத்து கட்டிடங்களை எடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அந்தக் கட்டிடத்தை சற்று தூரத்தில் இருந்து, கட்டிடத்திற்கு சுற்றி இடம் போதுமான அளவு இடம் விட்டு எடுத்துப் பாருங்கள். அந்தக் கட்டிடத்தை சுற்றி இருக்கும் பொருள்களே, இது போன்ற கட்டிடத்தின் அழகை நிர்ணயிக்கும் காரணிகள்.
![Viewpoint - Rajaseat - Madikere - Coorg](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_u8QhAvkULkTsMGivHCMTkUoxfcJwNFiNdlBkcOR90Mtf0pj6dDrRKzH_jyGFHtcFkQ95par_RTrQlk7n2qNA3CsZnxhuAquGs7MEpy3b699bwE8JWeOwBjEO90IIMeZbUL=s0-d)
உயரமான கட்டிடத்தை எடுக்க வேண்டுமெனில், கட்டிடத்தின் அருகில் நின்று மேலே பார்த்தவாரெடுத்தால், மேல் கட்டிடம் மிக வித்தியாசமாகக் காணும். ( அழகா இல்லையா என்பது எடுத்துப் பார்த்தால் மட்டுமே தெரியும் ;) )
![Mysore- Tippu](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uLlHvdYNo4Q3mzJE5TPzxUSLxPZw7AqGI9FAGew6mOyAWlCyp1FbTWofs4FilZf491wCMYu9CZVLsKwVy2LMFASYu2_4GXbKJzr2klsPeZJB16oDZRsY-JaHHHyaqpIFU=s0-d)
இந்த வகைப் புகைப்படத்தில், நிழற்படத்தின் அழகை நிர்ணயிக்கும் முக்கிய காரணி - வெளிச்சம். கட்டிடத்தை முழுமையாக எடுக்கும் போது வானத்தின் வெளிச்சத்திற்கும், கட்டிடத்தின் மேலுள்ள வெளிச்சத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். கட்டிடம் சற்று இருட்டாக இருக்கும் சில நேரங்களில். சூரிய வெளிச்சம் கட்டிடத்தின் மேல் விழும் நேரத்தில் எடுத்தால் அழகாக இருக்கும்.
![On the way to mysore](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ucUcPc-zRw_jpR4EQ6atcu6nHnm866lqufdsHZPK5xvURP952_S-JL0GJc08VnhDj7Wy_cpTV6hbT4uPh_G_EAxPc5sGQAhUCEuFmsd9cwH7OutOjlmWv2-xB2sx1Sn2s=s0-d)
உதாரணத்திற்கு சொல்லனும்னா, காலை அல்லது மாலை நேரத்தில், கட்டிடத்தின் பின் சூரியன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அப்போது கட்டிடத்தின் மீது விழும் வெளிச்சம் வெகு குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் கட்டிடத்தின் அழகு கிடைக்காமல் கருப்பொருள் under-exposed condition ஆக போய்விடும்.
![Sunset - at home town](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vqtzzs1x7jab09Hap2ZIA4dhhfUOzpx7OiH2t-F5mrNvGxNOXNpwlLsc75-szu96c3-KTASFHohHvGZW0aURi858kQudD68ipWVVJ1W-3ep5VGc0Brh3LobRQX69AjIso=s0-d)
கட்டிடத்தின் உள்ளேயோ அல்லது வெளியேயோ, எடுக்கும் போது நிழல்களையும் சற்று கவனித்து எடுக்கலாம். கட்டிட நிழல்கள் அருமையான புகைப்படத்திற்கு உத்திரவாதம் அளிக்கும். பக்க வாட்டில் இருந்து விழும் வெளிச்சத்தினால் அதிக அளவு நீண்ட நிழல் கிடைக்கும். ஆகவே காலை மற்றும் மாலை வேளைகளில் முயற்சித்துப் பாருங்கள்.
துறை சார்ந்த கட்டிடங்கள் எடுக்கும் போது அங்கு வேலை செய்யும் ஆட்கள் ஃப்ரேமில் இருந்தால், அழகு கூடும் இல்லையா ? சில கிராமத்து வீடுகளை தனியாக எடுப்பதை விட அந்த கிராமத்து மனிதர் அந்த ஃப்ரேமில் இருந்தால், சொல்ல வரும் செய்தி அழுத்தமாக வரும். அது போல இடத்திற்கேற்றவாறு முயற்சிக்கவும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO8PktQ2usVje8vwK3Zc4lDz6qZOpDiyXIOUgVHYv8fC7fsPFS9XETLzJxjGUmbw4OqHlCDkY9ckIMq4iRz5RfPg7zbdY96iltUEQHhsnWq7C6fmI_CExzSBfaciaf0PXUUNbLvkdeXqYF/s400/arch4.jpg)
அகழ்வாராய்ச்சி நிலையில் இருக்கும் அழிவு நிலைக் கட்டிடங்கள் கட்டமைப்புகள் எல்லாம் பிற்காலத்தில் பலருக்கும் உபயோகமாயிருக்கும். புதர் மண்டிய இடங்களை சற்று தூரத்தில் நின்று எடுக்கும் போது சற்று பேய்வீடு கெட்டப் வரும். எடுத்தப் பின் நீங்கள் பயந்து போகக் கூடாது என்பது முக்கியமான ஒன்று.
![Tippu 01](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sb_U-d0TfPPl2QsM9ouxTR8ILQrI_PUTtBEQ05P0vCwOAa3cJdHxmmYyqq9qLaqpWpjI15W2QU3HtZ_JwFEZzek60Jxyjua4eUjC9ksXPjya3DFUdmBXAAIUR04c5KZoc=s0-d)
உங்களிடம் நல்ல ஜூம் லென்ஸ் இருக்கிறதா, முடிந்த வரையில் சற்று தூரத்தில் நின்று அப்புறம் கட்டமைப்பை ஃபோகஸ் செய்யுங்கள். மிக அருகில் இருந்து எடுப்பதற்கும், தூரத்தில் இருந்து ஜூம் செய்து எடுப்பதற்கும் அதிக வித்தியாசம் காண்பீர்கள். ( ஏன் என்பது பற்றி நேரமிருந்தால் தனிப் பதிவிட முயற்சிக்கிறேன் )
சில நேரங்களில் கட்டிடங்களை/கட்டமைப்புகளை நேர் கோணத்தில் எடுத்தும் பாருங்கள். கட்டிடங்கள்/கட்டமைப்பு என்பதால், கட்டிடங்களில் உள்ள ஃப்ரேம்களை படத்தில் கொண்டு வர முயற்சியுங்கள்.
படிகள் உள்ளக் கட்டிடங்களை தேர்ந்தெடுத்தீர்களா ? நல்லது. அதில் உள்ளக் கோடுகளை வழி நடத்திச் செல்ல விட்டு அதற்கேற்றார்போல புகைப்படம் எடுங்கள்.
கட்டிடம்/கட்டமைப்பு என்ற உடனே அறைகளும், ஜன்னல்களும், கதவுகளும் நினைவுக்கு வருகிறதா? சரியான ஆள் சார் நீங்க. கோவில் சிலைகளை கணக்கெடுக்க மறந்துட்டீங்களே ? இந்தியாவுல கோவிலுக்காப் பஞ்சம். அழகான சிற்பங்களை வித விதமானக் கோணங்களில் எடுத்துப் பழகுங்கள். சிற்பங்கள் மட்டுமல்ல, அழகு நிறைந்தப் படித்துறைகளையும் கண்ணெடுத்துப் பாருங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLXUw0aNpXZH_LmCwDC23doxli4yLTpRFgKD7wfsdW8WhhN2QIhTktam_VztJo0IWAUEW8Rl1UVAU6QPaX76A_9KqdPFOTxt1GdqhRs36OTkPJHWQaB4t6KqCHDwM1Gud7bYWCV-ChloMB/s400/arch6.jpg)
அதே போல இங்கே எனக்கு கோவில் கிடையாது, நான் பெரிய ஹோட்டலில் தங்கியிருக்கிறேன் என்கிறீர்களா, வசதியாப் போச்சு. செயற்கை நீர்வீழ்ச்சி, செயற்கை நீச்சல் குளம் எல்லாம் உங்களுக்காகத் தான் சார் கட்டி வைத்திருக்கிறார்கள் அதையேன் விடப் போகிறீர்கள்.
குறுகலான சந்துகளின் இருபக்கமும் கட்டப்பட்டிருக்கும் வீடுகளைப் பாருங்கள். கற்பனை ஊற்றெடுக்கும். குறுகலான, பாலங்கள், இடிந்து விழுந்தப் பாலங்கள், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் தொங்குப் பாலங்கள் என இவை எல்லாம் இந்த வகைப் புகைப்படத்திற்கு உகந்தவையே.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhypPvcA5OfwxhIdKyC10yegXouedEtpL-VlqMIpL4GJ7zBdbVK5ZSGr_TJ2Wu_9FDPYGAkK4CySwEpeWeq6H-tNjR11J56_aJaAkbzYgGU8j82hRdrbX1qZonHTbXAVgNHeV0o7kUx8vUY/s400/arch5.jpg)
செட்டி நாடு வீடு போன்ற இடங்களில், அங்கு அமைந்திருக்கும் அழகான வேலைப்பாடுகளை மேக்ரோ/க்ளோசப் எடுத்தால் அழகாய் இருக்கும். பழைய வீடுகளில் ஜன்னல், கதவு என எல்லாவற்றிலும் நல்ல வேலைப்பாடுகள் இருக்கும். தவற விடாதீர்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiycjE5OPwqLeiQ-n02AOWoh_XaTgU5XhoK5OA4v8QgColobg4Yg4YxsiLYKfSh5_0yTbAH-hhqCIVC2vp7m3wOemeXlarlFBDa-2OgJPBXYzkkK0Yq0ezx4yeqt8MqEDNUWVawf9EM46ED/s400/arch3.jpg)
பகல் நேரத்தில் எடுப்பது போலவே, இரவு வெளிச்சத்தில் ( நிலா? அல்லது ஒளியூட்டப்பட்ட மாளிகைகள் ?) கட்டிடங்களை எடுக்கலாம். ஆனால் இவற்றிற்கு நிறைய பொறுமைத் தேவை. சற்று அவசரப் பட்டாலும் அழகு குறைந்து அலங்கோலமாகும் அபாயம் உண்டு.
பாதி இருட்டும், பாதி வெளிச்சமும் இருக்கும் சில இடங்களில் , உதாரணத்திற்கு நீண்ட ஹால் என்று வைத்துக் கொள்வோம் அப்போது படம் எடுக்கையில் ஏதோ ஒரு மூலை தான் சரியாக வரும். அதற்காக கவலைப் பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது HDR மெத்தேட். இது பற்றி சர்வேசன் ஏற்கனவே விளக்கி இருக்கிறார் இங்கே !
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_u93QelpfBjZkEVrDZ3HPUcAxT26N8s3eF8hd2TddFt1DScjj8_rV_66LpiuR6wUmvBUJiTpYh8iBz5V6l5xHcgLJRgQd2_xaM8jXNTPSndS5_ngHhQBgtoovk-7M9cjyD7hQ=s0-d)
என்ன எல்லாம் படிச்சிட்டீங்களா, வழக்கமா சொல்றது தான். இவை எல்லாம் எங்களின் ஆலோசனை மட்டுமே . உங்கள் கற்பனைத் திறனை தறிகெட்டு ஓட விட்டால் வெகு அழகானப் புகைப் படங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமென்ன ?
உங்களுக்கு இதைப் பற்றி மேலும் தெரிந்தால் பின்னூட்டத்தில் பதிலிடவும்.
Architecture / கட்டமைப்பு நிழற்படங்களுக்கு முக்கியமான இடையூறாக இருப்பது கோடுகள். எந்தப் பெரிய அல்லது சிறிய கட்டிடமாக இருக்கட்டுமே அதில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் இருக்கும். ( Remember leading line concept ). இந்தக் கோடுகள் கவனத்தைச் சிதறடிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். இது பெரும்பாலும் தவறான கோணத்தில் எடுக்கும் போது புகைப் படத்தின் அழகையே கெடுத்து குட்டிச் சுவராக்கி விடும். ஆனால் அதுவே சற்று யோசித்து சரியான கோணத்தில் எடுத்தால் அற்புதமான அழகைத் தரும். உதாரணத்துக்கு சொல்லனும்னா, கட்டிடத்தின் அருகே நின்று வெகு நேராக எடுக்கும் புகைப்படத்திற்கும் , அதையே பக்க வாட்டிலோ அல்லது சற்று வித்தியாசக் கோணத்திலோ எடுத்தால் வரும் படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரியும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh2SDeP8IuQaYanjfgy1mR5gSlJE1TTI9HfctRbbwnkyLX3YQ-wH5a7YnUta0M7HloUdwbAsnEV5_gmYeq_GIzRfeeNRZ5bsQFoSejWu13D3QI4j1BLNZbm3AyrBvLDR6A5QR78QMG8eIC/s400/ver+1_-0_-1_tonemapped.jpg)
பண்ணை வீடுகளையோ அல்லது தனித்திருக்கும் வீடுகளையோ அல்லது பழைய காலத்து கட்டிடங்களை எடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அந்தக் கட்டிடத்தை சற்று தூரத்தில் இருந்து, கட்டிடத்திற்கு சுற்றி இடம் போதுமான அளவு இடம் விட்டு எடுத்துப் பாருங்கள். அந்தக் கட்டிடத்தை சுற்றி இருக்கும் பொருள்களே, இது போன்ற கட்டிடத்தின் அழகை நிர்ணயிக்கும் காரணிகள்.
உயரமான கட்டிடத்தை எடுக்க வேண்டுமெனில், கட்டிடத்தின் அருகில் நின்று மேலே பார்த்தவாரெடுத்தால், மேல் கட்டிடம் மிக வித்தியாசமாகக் காணும். ( அழகா இல்லையா என்பது எடுத்துப் பார்த்தால் மட்டுமே தெரியும் ;) )
இந்த வகைப் புகைப்படத்தில், நிழற்படத்தின் அழகை நிர்ணயிக்கும் முக்கிய காரணி - வெளிச்சம். கட்டிடத்தை முழுமையாக எடுக்கும் போது வானத்தின் வெளிச்சத்திற்கும், கட்டிடத்தின் மேலுள்ள வெளிச்சத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். கட்டிடம் சற்று இருட்டாக இருக்கும் சில நேரங்களில். சூரிய வெளிச்சம் கட்டிடத்தின் மேல் விழும் நேரத்தில் எடுத்தால் அழகாக இருக்கும்.
உதாரணத்திற்கு சொல்லனும்னா, காலை அல்லது மாலை நேரத்தில், கட்டிடத்தின் பின் சூரியன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அப்போது கட்டிடத்தின் மீது விழும் வெளிச்சம் வெகு குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் கட்டிடத்தின் அழகு கிடைக்காமல் கருப்பொருள் under-exposed condition ஆக போய்விடும்.
கட்டிடத்தின் உள்ளேயோ அல்லது வெளியேயோ, எடுக்கும் போது நிழல்களையும் சற்று கவனித்து எடுக்கலாம். கட்டிட நிழல்கள் அருமையான புகைப்படத்திற்கு உத்திரவாதம் அளிக்கும். பக்க வாட்டில் இருந்து விழும் வெளிச்சத்தினால் அதிக அளவு நீண்ட நிழல் கிடைக்கும். ஆகவே காலை மற்றும் மாலை வேளைகளில் முயற்சித்துப் பாருங்கள்.
துறை சார்ந்த கட்டிடங்கள் எடுக்கும் போது அங்கு வேலை செய்யும் ஆட்கள் ஃப்ரேமில் இருந்தால், அழகு கூடும் இல்லையா ? சில கிராமத்து வீடுகளை தனியாக எடுப்பதை விட அந்த கிராமத்து மனிதர் அந்த ஃப்ரேமில் இருந்தால், சொல்ல வரும் செய்தி அழுத்தமாக வரும். அது போல இடத்திற்கேற்றவாறு முயற்சிக்கவும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO8PktQ2usVje8vwK3Zc4lDz6qZOpDiyXIOUgVHYv8fC7fsPFS9XETLzJxjGUmbw4OqHlCDkY9ckIMq4iRz5RfPg7zbdY96iltUEQHhsnWq7C6fmI_CExzSBfaciaf0PXUUNbLvkdeXqYF/s400/arch4.jpg)
அகழ்வாராய்ச்சி நிலையில் இருக்கும் அழிவு நிலைக் கட்டிடங்கள் கட்டமைப்புகள் எல்லாம் பிற்காலத்தில் பலருக்கும் உபயோகமாயிருக்கும். புதர் மண்டிய இடங்களை சற்று தூரத்தில் நின்று எடுக்கும் போது சற்று பேய்வீடு கெட்டப் வரும். எடுத்தப் பின் நீங்கள் பயந்து போகக் கூடாது என்பது முக்கியமான ஒன்று.
உங்களிடம் நல்ல ஜூம் லென்ஸ் இருக்கிறதா, முடிந்த வரையில் சற்று தூரத்தில் நின்று அப்புறம் கட்டமைப்பை ஃபோகஸ் செய்யுங்கள். மிக அருகில் இருந்து எடுப்பதற்கும், தூரத்தில் இருந்து ஜூம் செய்து எடுப்பதற்கும் அதிக வித்தியாசம் காண்பீர்கள். ( ஏன் என்பது பற்றி நேரமிருந்தால் தனிப் பதிவிட முயற்சிக்கிறேன் )
சில நேரங்களில் கட்டிடங்களை/கட்டமைப்புகளை நேர் கோணத்தில் எடுத்தும் பாருங்கள். கட்டிடங்கள்/கட்டமைப்பு என்பதால், கட்டிடங்களில் உள்ள ஃப்ரேம்களை படத்தில் கொண்டு வர முயற்சியுங்கள்.
படிகள் உள்ளக் கட்டிடங்களை தேர்ந்தெடுத்தீர்களா ? நல்லது. அதில் உள்ளக் கோடுகளை வழி நடத்திச் செல்ல விட்டு அதற்கேற்றார்போல புகைப்படம் எடுங்கள்.
கட்டிடம்/கட்டமைப்பு என்ற உடனே அறைகளும், ஜன்னல்களும், கதவுகளும் நினைவுக்கு வருகிறதா? சரியான ஆள் சார் நீங்க. கோவில் சிலைகளை கணக்கெடுக்க மறந்துட்டீங்களே ? இந்தியாவுல கோவிலுக்காப் பஞ்சம். அழகான சிற்பங்களை வித விதமானக் கோணங்களில் எடுத்துப் பழகுங்கள். சிற்பங்கள் மட்டுமல்ல, அழகு நிறைந்தப் படித்துறைகளையும் கண்ணெடுத்துப் பாருங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLXUw0aNpXZH_LmCwDC23doxli4yLTpRFgKD7wfsdW8WhhN2QIhTktam_VztJo0IWAUEW8Rl1UVAU6QPaX76A_9KqdPFOTxt1GdqhRs36OTkPJHWQaB4t6KqCHDwM1Gud7bYWCV-ChloMB/s400/arch6.jpg)
அதே போல இங்கே எனக்கு கோவில் கிடையாது, நான் பெரிய ஹோட்டலில் தங்கியிருக்கிறேன் என்கிறீர்களா, வசதியாப் போச்சு. செயற்கை நீர்வீழ்ச்சி, செயற்கை நீச்சல் குளம் எல்லாம் உங்களுக்காகத் தான் சார் கட்டி வைத்திருக்கிறார்கள் அதையேன் விடப் போகிறீர்கள்.
குறுகலான சந்துகளின் இருபக்கமும் கட்டப்பட்டிருக்கும் வீடுகளைப் பாருங்கள். கற்பனை ஊற்றெடுக்கும். குறுகலான, பாலங்கள், இடிந்து விழுந்தப் பாலங்கள், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் தொங்குப் பாலங்கள் என இவை எல்லாம் இந்த வகைப் புகைப்படத்திற்கு உகந்தவையே.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhypPvcA5OfwxhIdKyC10yegXouedEtpL-VlqMIpL4GJ7zBdbVK5ZSGr_TJ2Wu_9FDPYGAkK4CySwEpeWeq6H-tNjR11J56_aJaAkbzYgGU8j82hRdrbX1qZonHTbXAVgNHeV0o7kUx8vUY/s400/arch5.jpg)
செட்டி நாடு வீடு போன்ற இடங்களில், அங்கு அமைந்திருக்கும் அழகான வேலைப்பாடுகளை மேக்ரோ/க்ளோசப் எடுத்தால் அழகாய் இருக்கும். பழைய வீடுகளில் ஜன்னல், கதவு என எல்லாவற்றிலும் நல்ல வேலைப்பாடுகள் இருக்கும். தவற விடாதீர்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiycjE5OPwqLeiQ-n02AOWoh_XaTgU5XhoK5OA4v8QgColobg4Yg4YxsiLYKfSh5_0yTbAH-hhqCIVC2vp7m3wOemeXlarlFBDa-2OgJPBXYzkkK0Yq0ezx4yeqt8MqEDNUWVawf9EM46ED/s400/arch3.jpg)
பகல் நேரத்தில் எடுப்பது போலவே, இரவு வெளிச்சத்தில் ( நிலா? அல்லது ஒளியூட்டப்பட்ட மாளிகைகள் ?) கட்டிடங்களை எடுக்கலாம். ஆனால் இவற்றிற்கு நிறைய பொறுமைத் தேவை. சற்று அவசரப் பட்டாலும் அழகு குறைந்து அலங்கோலமாகும் அபாயம் உண்டு.
பாதி இருட்டும், பாதி வெளிச்சமும் இருக்கும் சில இடங்களில் , உதாரணத்திற்கு நீண்ட ஹால் என்று வைத்துக் கொள்வோம் அப்போது படம் எடுக்கையில் ஏதோ ஒரு மூலை தான் சரியாக வரும். அதற்காக கவலைப் பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது HDR மெத்தேட். இது பற்றி சர்வேசன் ஏற்கனவே விளக்கி இருக்கிறார் இங்கே !
என்ன எல்லாம் படிச்சிட்டீங்களா, வழக்கமா சொல்றது தான். இவை எல்லாம் எங்களின் ஆலோசனை மட்டுமே . உங்கள் கற்பனைத் திறனை தறிகெட்டு ஓட விட்டால் வெகு அழகானப் புகைப் படங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமென்ன ?
உங்களுக்கு இதைப் பற்றி மேலும் தெரிந்தால் பின்னூட்டத்தில் பதிலிடவும்.