Saturday, July 7, 2007

உலகைக் குலுக்கிய புகைப்படம்

5 comments:
 
ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பது மிகையில்லை என்று சொல்லுமளவிற்கு அந்த படம் அமெரிக்க மக்களின் இதயத்தை தைத்தது. தங்களது அரசு செய்யும் கொடூரத்தை அதுவரை பாராமுகமாக இருந்த அமெரிக்க பொதுமக்கள் இந்த படத்தை செய்தித்தாள்களில் பார்த்தவுடன் கொந்தளித்தனர். வியட்னாம் போருக்கெதிராக பாடகர்களும், அறிஞர்களும் பொதுமக்களும் திரண்டனர். இதைஎதிர்கொள்ள இயலாமல் கடைசியில் அமெரிக்க அரசாங்கமும் பணிந்தது. இதோ அந்த புகைப்படம். அந்த படம் .... நேபாம் எனும் உடலில் பற்றிஎறியும் ரசாயனக் குண்டுகளை ஒரு கிராமத்தில் வீசியபோது ஒரு சிறுமி தீயிடமிருந்து தப்பிக்க தனது ஆடைகளைத் துறந்து உயிர்பிழைக்க ஓடிவருவதை அசோசியேட்டட் பிரஸ்' ஐ சேர்ந்த நிக் உட்என்ற புகைப்படக் கலைஞன் தனது காமிராவில் பிடித்தது.
அந்த சரித்திரப் புகழ் பெற்ற படம் கீழே



இந்தப் பெண் பிற்காலத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து போரின் கொடுமைகளைஎடுத்துச் சொல்லும் ஒரு ஐக்கிய நாட்டு அமைதித்தூதுவர் ஆனார்!

முழுச் செய்திக்கு இங்கே சுட்டவும்


அன்புடன்
ஓசை செல்லா

5 comments:

  1. இவர் தற்போது கனடா நாட்டில் அரசியல் புகலிடம் பெற்று வசித்து வருவதாக சமீபத்தில் நியூஸ்வீக் பத்திரிகையில் படித்தேன்.

    ReplyDelete
  2. manase norungiyathu chella antha padaththai paarekkumpoothu. keelvippadaatha seythikal

    ReplyDelete
  3. குலுக்கியதா? உலுக்கியதா? படத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. இந்தப் படம் செய்தி எற்கனவே பார்த்து,படித்துள்ளேன். அந்தப் படப்பிடிப்பாளரே இப்பெண்ணை
    மணந்தார் எனவும் அறிந்தேன் ,உண்மையா?

    ReplyDelete
  5. //இந்தப் படம் செய்தி எற்கனவே பார்த்து,படித்துள்ளேன். அந்தப் படப்பிடிப்பாளரே இப்பெண்ணை
    மணந்தார் எனவும் அறிந்தேன் ,உண்மையா? //
    No, from what ever i learnt, the photographer sucided himself due to extreme stress, that arised due to the fact that he didnt attempt to save the girl. I might be wrong also.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff